பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவில் 180 நாடுகளில் இந்தியா 161 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாய கம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் குழி தோண்டிப் புதைப்பதில் ஒன்றிய மோடி அரசு புதிய சாதனையை எட்டியிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பொ றுப்பேற்ற போது உலக பத்திரிகை சுதந்திர குறி யீட்டில் இந்தியா 140 ஆவது இடத்திலிருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்து தற்போது 161 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. இதற்குக் காரணம் பத்திரிகையா ளர்களுக்கு எதிரான வன்முறை, ஆட்சியதிகா ரத்திற்கு ஆதரவானவர்கள் ஊடகத்தைக் கைய கப்படுத்துதல், ஒரு அரசியல் சார்பு ஊடகமாக மாற்றப்படுவதே ஆகும் என்று எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்தி ருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஊடக சுதந்திரத்திற்கும் ஆப்பு வைக்கும் வேலையில் மோடி அரசு இறங்கியிருக்கிறது. சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகள் தொ டர்பான புதிய திருத்தப்பட்ட வரைவை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் ஒரு ஊடகம் வெளியிடும் செய்தியை ஒன்றிய அரசின் தகவல் வழங்கும் அமைப்பு (பிஐபி ) போலி என்று சொன்னால் உடனே, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலிருந்தும் நீக்கிட வேண்டும். அதே போல் அரசு மற்றும் அரசுடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் ஒரு செய்தியைக் குறிப்பிட்டு, அது தங்களின் நோக் கத்தைத் திசை திருப்புவதாக இருப்பதாகத் தெரி வித்தால் உடனே அதையும் நீக்கிட வேண்டும் என்று இருக்கிறது.
புதிய வரைவில் போலி என்பதற்கும், திசை திருப்பல் என்பதற்கும் எந்த தெளிவான வரை யறையும் இல்லை. ஒன்றிய அரசு செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கும் ஒரு சிறு பிரிவு எப்படி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைப் போலி, உண்மை என்று தீர்ப்பளிக்க முடியும்? அப்படி யென்றால் நீதிமன்றத்திற்கு என்ன வேலை? ஏற்கனவே பிஐபி யின் உண்மை சரிபார்ப்பு குழு மதவெறியர்கள் அனுப்பிய தகவல்களை உண்மை என்று பதிவிட்டு அசிங்கப்பட்டது. உண் மையான செய்திகளைத் தவறு எனச் சொல்லி வாங்கிக் கட்டியது.
இந்த லட்சணத்தில் பிஐபிக்கு உண்மை, போலி எனத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் கிடைத் தால் அது ஆர்எஸ்எஸ் - இன் துணை அலுவலக மாகத்தான் மாறும். இது ஊடக சுதந்திரத்தை மட்டும் பறிக்கும் செயல் அல்ல. ஜனநாயகத்தைச் சவக்குழிக்குள் தள்ளும் நயவஞ்சகம் ஆகும்.
அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை விமர்சிப்பதைத் தேசவிரோதம் என்று கருத முடி யாது. துடிப்பான ஜனநாயகத்திற்குப் பத்திரிகை சுதந்திரம் மிகவும் அவசியம் என உச்சநீதிமன்றம் மோடி அரசிற்கு குட்டு வைத்தது. அந்த நீதிமன்ற தலையீட்டையும் கொல்லைப்புற வழியாகத் தடுத்திடும் உள்நோக்கம் கொண்டதே புதிய வரைவு. இதனை முற்றிலுமாக முறியடித்திட வேண்டும்.