headlines

img

மோடி அரசைத் துரத்தும் நீதி

தேர்தல் பத்திரங்களை சட்டப்பூர்வமாக்கி கோடி கோடியாக கொள்ளையடித்த பாஜகவின் மெகா ஊழலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அடுத்த வழக்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பான விவரங்களை உடன டியாக (இன்று மாலைக்குள்) தேர்தல் ஆணை யத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு எச்சரிக்கையுடன் கூடிய உத்த ரவினை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தேர்தல் பத்திரங்களை சட்டப்பூர்வமாக மாற்றியதன் மூலம் மோடி அரசு ஊழலை சட்டப் பூர்வமானதாக மாற்றியது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இதரர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 15 அன்று  உச்சநீதிமன்றம் 232 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரையை வழங்கியது. அதில் தேர்தல் பத்திரங்கள் என்பவை எப்படி அரசியலில் பணம் விளையாடுவதை தீவிரப்படுத்தியிருக்கிறது என்று விரிவாக உச்சநீதிமன்றம் விவாதித்துள்ளது.

தேர்தல் என்பதும் அரசியல் என்பதும், அரசி யல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது என்ப தும் பொது நிகழ்வுகள். அப்படிப்பட்ட பொதுத் தன்மை வாய்ந்த நிகழ்வுகளில் தனியார் எனப் படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் அளிக்கும் நிதியும், நன்கொடையும் பொதுவில்தான் வைக் கப்பட வேண்டுமே தவிர, கொடுத்தவர், பெற்றவர், பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு என  எதுவும் ரகசியமானதாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் மிகவும் ஆணித்தரமாக குறிப் பிட்டுள்ளது. 

இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாறு நெடுகிலும் பின்பற்றி வருகிற மகத்தான விழுமிய நெறி என்பது குறிப்பிடத் தக்கது. அரசியல் கட்சிகள் மக்களிடையே பணி யாற்றுகின்றன; எனவே மக்களிடம் அனைத்து தகவல்களையும் சொல்வதற்கு அவை கடமைப் பட்டவை என்பது மட்டுமல்ல; அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கான குடி மக்களின் உரிமையுடனும் இது சம்பந்தப்பட்டி ருக்கிறது.

இதையும் மிகச் சரியாக தனது தீர்ப்புரை யில் எழுதியிருந்தது உச்சநீதிமன்றம். 

ஆனால் அரசியலில் நேர்மை என்றால் என்னவென்று கேட்கும் - அழுக்கும் மோசடி யுமே உருவான பாரதிய ஜனதா கட்சி, தனது ஆட்சியதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை நிர்ப்பந்தத்தி ற்கு உள்ளாக்கி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக் காமல் காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்தது. அதற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறது இன் றைய உச்சநீதிமன்ற உத்தரவு. 

இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் கூட குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாடு முழுவதும் அமலாக்கு வதாக மோடி அரசு உடனடியாக அறிவித்திருக் கக்கூடும். ஆனால் மோடி அரசே, உங்களை நீதி விடாது.