headlines

img

தொடரும் வெறிக் கூச்சல்கள்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றபின் தனது இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் தீவிரமாக அமல்படுத்துவ தற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன. `ஹிஜாப், ஹலால் சர்ச்சைகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் மசூதிகள் குறி வைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் அளித் துள்ள பல தீர்ப்புகளை அமல்படுத்த மறுக்கும் பாஜக அரசுகள் வழிபாட்டுத்தலம் தொடர்பான  உத்தரவை மட்டும் உடனடியாக அமல்படுத்தத் துடிக்கின்றன.  

மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அள விற்குள் பயன்படுத்தவேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மசூதிக்கு மட்டும் உத்தரவு போட்டால் உள்நோக்கம் தெரிந்துவிடும் என்ப தால் கோவில்களையும் தேவாலயங்களையும் அதோடு  சேர்த்துள்ளனர். பொதுவாகப் பார்க்கும் போது இது நல்லதுதானே என்று தோன்றும். ஆனால் விஷயம் அதுவல்ல;  ஒலி மாசு அதிக மாக இருப்பதாகக் கூறி முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதுதான் அவர்களின் நோக்கம். 

கர்நாடக மாநிலத்தில் காவல்துறையிட மிருந்து இந்த உத்தரவு வருவதற்கு முன்பு சங்பரி வாரங்களின் நிர்வாகிகள் மாநில காவல்துறைத் தலைவரைச் சந்தித்து ஒலிமாசு ஏற்படுத்தும் வகை யில் செயல்படும் மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தனர். அவர்க ளின் கோரிக்கையைத் தான் சுற்றறிக்கையாக மாற்றி வழிபாட்டுத் தலங்களுக்கு அம்மாநில காவல்துறை அனுப்பியுள்ளது. இதுமட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சாமியார்க ளும் இந்துத்துவா அமைப்பினரும் பேசி வரு கிறார்கள்.

காட்டுமிராண்டிகளாகவே நடந்துகொள்ளும் இவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடிய வர்கள் என்பதால் சிறுபான்மை மக்களை இவர்க ளிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இராம நவமியன்று  இஸ்லாமியர்களின் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தினர். பல இடங்களில்  மசூதிகளின் மீது காவிக்கொடியை ஏற்றினர். 

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபின்னர் மாநிலம் முழுவதும் இதுபோன்ற வெறிக்கூச்சல்களும், மிரட்டல்களும் அதிகரித் துள்ளன. லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொல்ல முயன்ற  வழக்கில் முக்கிய சாட்சியான  ஹர்தீப் சிங் தாக்கப்பட்டதோடு, சாட்சியம் அளித்தால் கொன்று  விடுவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார்.  இப்படி உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு மிகமோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

ஒன்றிய அரசு தலையிடாவிட்டால் நிலைமை மோசமடைந்துவிடும். எனவே சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலைநாட்டும் பொறுப்பும், சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடைமைக ளுக்கும் உத்தரவாதம் அளிக்கவேண்டிய கடமை யும் ஒன்றிய மாநில ஆட்சியாளர்களுக்கு உள்ளது.