headlines

img

பாஜகவை வெல்ல முடியும்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி உறுதியாகி  விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை மாநில அள விலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற  உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் வாக்கு சதவீதத்தில் 50 விழுக்காட்டைத் தாண்ட வில்லை.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்க ளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 254 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் கடந்த சட்டப்பேரவையில் அக்கட்சி 312 இடங்களைக் கொண்டிருந்தது. தற்போது 58இடங்களை இழந்துள்ளது. வாக்குகள் அடிப்படையில் பார்த்தால்கூட கடந்த தேர்தலில் 39.7 விழுக்காட்டைப் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் கூடுதலாக  2 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அதாவது 41.3 விழுக்காட்டைப் பெற்றுள் ளது. ஆனால் அம்மாநிலத்தில் அகிலேஷ் தலை மையிலான முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கடந்த தேர்தலில் 21.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 47 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் 32 விழுக்காடு வாக்குகளுடன் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் இதர மதச்சார்பற்ற சக்திகள் சமாஜ்வாதி கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் இன்று பாஜக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி வரிசை யில் தான் அமர்ந்திருக்கும். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு 51.09 விழுக்காடாகும். எனவே வரும் மக்கள வைத் தேர்தலில்  மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்தமுடியும். மதச்சார் பற்ற சக்திகளின் பிளவை பாஜக பயன்படுத்திக் கொண்டு தன்னை தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.  

 உத்தரப்பிரதேச வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கும் பாஜக கொள்கை களுக்கும்  கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் பஞ்சாபில் ஏன் வெற்றி கிடைக்க வில்லை? கோவாவில் தட்டுத்தடுமாறித்தான் பாஜக பிழைத்திருக்கிறது?. இந்த கதி ஏற்பட என்ன  காரணம். எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெற வுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒன்றிய பாஜக அரசு மீதான மதிப்பீடு அடிப்படையிலும் எதிர்க்கட்சிகள் அமைக்க உள்ள கூட்டணியைப் பொறுத்தும் அமையும். இருப்பினும் மாநிலத் தேர்தல் வெற்றியை வைத்து ஒரு பதற்றத்தை உருவாக்குவது உளவியல் ரீதியாக மக்களைச் சலவை செய்யும் தந்திரமான முயற்சியைத் தவிர வேறுஇல்லை. 

பாஜக வெல்லமுடியாத சக்தி  அல்ல. அக்கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகவும் பெரு நிறுவன ஆதிக்கத்திற்கு எதி ராகவும் அதிகரித்துவரும் பாசிச எதேச்சதி காரத்திற்கு எதிராகவும் போராட்டங்களை இருமடங்கு வீச்சில் மேற்கொள்ளவேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.