headlines

img

அதிர்ச்சியளிக்கும் மாடல்

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டின் இறுதி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி இப்போதே பாஜகவினர் பிரச்சா ரத்தை துவக்கிவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி குஜராத்தில் முகாமிட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாடல் வளர்ச்சியை இன்றளவும் நாடு ஆச்சரியத் துடன் பார்க்கிறது என்று கூறியுள்ளார். அத்துடன் அவர் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் விசயங்களை யும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் வகுப்புவா தக் கலவரங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வந்ததாகவும், பெரும்பாலான நேரம் மாநிலத்தில் ஊரடங்கே அமலில் இருந்ததாகவும், வேலைக்கு செல்லும் ஒருவர் உயிருடன் வீடு  திரும்ப உத்தரவாதமில்லாத சூழலே நிலவியதாக வும் அமித்ஷா கூறியிருக்கிறார்.

எத்தனை காலம்தான் ஆட்சியிலேயே இல்லாத காங்கிரஸ் கட்சியை குறை கூறிக் கொண்டிருப்பார்கள் பாஜகவினர். அவர்களுக்கே அலுப்புத்தட்டவில்லை போலும். எதற்கெடுத்தா டும் காங்கிரஸ் ஆட்சியை சாடும் இவர்கள், ஆட்சி க்கு வந்தபிறகு குஜராத் மாநிலத்தில் என்ன செய் தார்கள் என்பதை அந்த மாநில மக்களும் நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த மதவெறி வன்முறைகளையும், அதனால் உயிரிழந்த சிறுபான் மையினரையும்  அப்போது ஏற்பட்ட நாசக் கேடு களையும் யாரும் அத்தனை எளிதாக மறந்துவிட மாட்டார்கள். ஆனால் பொய்யையே பரப்பி உண்மை போல காட்டுவதை இவர்களின் எஜமா னர்களான ஆர்எஸ்எஸ்காரர்கள் நீண்ட காலமா கவே செய்து வந்ததையே இப்போது அமித்ஷா வும் கடைப்பிடிக்கிறார்.

வேலைக்குச் செல்லும் நபர் வீடு திரும்ப உத்தரவாதம் இல்லாத நிலை இருந்ததாகக் கூறும் அமித்ஷா மாநில உள்துறை அமைச்சராக இருந்த போது, நடந்த வன்முறை வெறியாட்டங்களில் வீட்டிலிருந்த பெண்களும் கூட உயிர் தப்ப வில்லை என்பதை குஜராத் கோப்புகள் எனும் நூல் அம்பலப்படுத்தியிருப்பதை நாடறியும்.

பெஸ்ட் பேக்கரி எரிப்பு சம்பவத்தை, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவிலிருந்த சிசுவை எடுத்து வெளியே வீசிய கொடூரத்தை, ஒரு முஸ்லிம் இளைஞன் இரு கைகூப்பி தங்களை விட்டுவிடுமாறு இறைஞ்சிய காட்சியை யாரால் மறக்க முடியும். அதையெல்லாம் இவரது கண்ண சைவில், கையசைவில், வாயசைவில், ஒத்துழைப்பில் ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரங்கள் தானே நடத்தின.

இத்தகைய கொடூரத்தை கண்டு தானே அப் போது பிரதமராக இருந்த இவரது கட்சியைச் சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன் என்று கூறியதே அதற்கு சாட்சி அல்லவா?

இவர்களது குஜராத் மாடல்  வளர்ச்சி என்பது அதானியையும், அம்பானியையும் உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னேற்றியதை தவிர வேறு என்ன மாடல்?