headlines

img

உளவு வேலைக்கு உதவுவதால் பாராட்டா?

இந்தியா, இஸ்ரேல் இடையிலான உறவு குறித்து பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள் ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு நிலவி வரு வதாகவும், இதில் புதிய இலக்குகளை நிர்ணயிப்ப தற்கான சரியான தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலஸ்தீன மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொண்டதோடு அந்த மக்கள் மீது தொடர்ந்து வன்முறையை ஏவி கொன்றொழித்து வரும் இன வெறி நாடான இஸ்ரேலை இந்தியா ஒதுக்கியே வைத்திருந்தது. 1992 ஆம் ஆண்டு தான் இரு நாடு களுக்கிடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு ஜனதா ஆட்சிக் காலத்தில் அயல் துறை அமைச்சராக வாஜ்பாய் இருந்த போது அந்த நாட்டிற்கு அவர் மேற்கொண்ட பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்தப் பிறகு இனவெறி இஸ்ரேல் நாட்டுடன் சித்தாந்தரீதியாக நெருக்கமான உறவு பேணப்பட்டது. சுயேட்சையான அயல்துறை கொள்கையை கைவிட்டு அமெரிக்க வல்லரசுக்கு சார்பான அயல்துறை கொள்கையை பாஜக கூட் டணி அரசு பின்பற்றும் நிலையில், மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் அடியாள் போல செயல்படுகிற இஸ்ரேலுடன் நெருக்கம் அதிகமானது.

2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரேல் சென்ற போதுதான் பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்குவதற்கான உடன்பாடு ஏற்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் ஏடு அம்பலப்படுத்தியுள்ள நிலையில்தான் இஸ்ரேலு டனான உறவு குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர், மேலும் புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்கிறார். இன்னும் இந்திய ஜன நாயகத்தை அழிக்கக் கூடிய வகையில்  எத்தனை மென்பொருட்களை இஸ்ரேல் நிறுவனங்களிட மிருந்து வாங்க திட்டமிட்டிருக்கிறார்களோ தெரியவில்லை. 

இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா வில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி கள் என 300க்கும் மேற்பட்டோர் உளவு வளை யத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர் களது ஒவ்வொரு நடவடிக்கையும் கண்கா ணிக்கப்படுகிறது.

இதில் கிடைக்கும் ஆதாரங்களை கொண்டு பலரையும் மிரட்டி தங்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரல் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொரு ளாதார கொள்கைக்கு ஒத்திசைவாக செயல்பட வைத்துள்ளனர். உளவு மென்பொருள் மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நவீன ஆயுதங் களை இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.

ஐ.நா. சபையில் இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை பாஜக கூட்டணி அரசு மாற்றியுள்ளது. கூடா நட்பு, கேடாய் முடியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப இஸ்ரேலுடனான உறவால் இந்தியா இழந்ததே அதிகம். பெற்றது ஒன்றுமில்லை.