headlines

img

சமூக நீதிக்கு வெற்றி

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சரியானதே  என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற் கத்தக்கது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பொ துப் பிரிவினருக்கு இந்தாண்டு மட்டும் 10விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், ஒவ் வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக இட ஒதுக்கீடு பின்பற்ற முடியாது என்பதால், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, பாமக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது.  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் ஒன்றிய அரசு மருத்துவக் கல்லூரி களில் அகில இந்திய இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க முன்வரவில்லை. இதனால் அரசியல் கட்சி களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டன. இட ஒதுக்கீட்டைப் பறிக்கக் கூடாது என வலுவான குரல்கள் எழுந்தன.

இதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாகக் கடந்தாண்டு ஒன்றிய அரசு,  “இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  27விழுக்காடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யு எஸ்) 10 விழுக்காடு இடங்களை ஒதுக்குவதாக” அறி விக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் இந்தாண்டு மருத்துவக் கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமுடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறு திப்படுத்துமாறு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டின.  இக் கட்சிகளின் நியாயமான வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கு வது, அரசியல் சாசனத்தின்படி அனுமதிக்கப்படுவ தாகக் கூறியுள்ளது. இது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.

இது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்த தீர்ப்பால் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 5000 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இது பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தவாய்ப்பைப்  பயன்படுத் திக் கொண்டு இனி நாட்டின் எந்தக் கல்லூரியி லும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர முடியும் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

இருப்பினும் ஏழை எளிய பின்தங்கிய பகுதி மாணவர்களின் மருத்துவக்கனவை பறித்துக் கொண்டிருக்கும். நீட் தேர்வையும் அகற்ற அரசியல் கட்சிகளின் போராட்டம் தொடர வேண்டும்.