headlines

img

பாராட்டத்தக்க அறிவிப்பு

தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசி யல் கட்சிகளின் ஒன்றுபட்ட, உறுதியான எதிர்ப்புக் குரலில் உள்ள நியாயத்தை உடனடி யாக உணர்ந்து, “2023 ஆம் ஆண்டு தொழிற்சாலை கள் (தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வடிவு மீதான  செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தி ருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. 

150 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமையை உறுதி செய்யும் விதமாக, மேற்கண்ட சட்ட முன்வடிவுக்கு எதிராக அரசியல் பேதமின்றி,  தொழிற்சங்க பேதமின்றி, தொழிலாளர் வர்க்கம் என்ற உணர்வுடன் குரல் எழுப்பிய தமிழ்நாட்டின் அரசியல் கட்சி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்து, திமுகவின் தோழமைக் கட்சிகள் என்ற போதி லும், அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட முன்வடிவு எந்தளவிற்கு மோசமானது என்பதை மிகச் சரியான முறையில் அரசுக்கு சுட்டிக்காட்டிய தோடு மட்டுமல்ல; உடனடியாக போராட்டக் களத்தில் இறங்கியது மட்டுமல்ல;  இந்த சட்ட முன்வடிவு செயலாக்கம் பெற்றால் தீராத பழிக்கு திமுக ஆளாகிவிடும்; அத்தகைய பழி நேர்ந்து விடக்கூடாது என்ற தோழமை உணர்வுடனும் விமர்சித்து, முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்வதற்கும் முன் நின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

வலுவான மாற்றுக் கருத்து களத்தில் இருக்கி றது என்பதை உணர்ந்தவுடனே, “மக்களிடம் இருந்து ஏதேனும் மாற்றுக் கருத்துகள் வரப் பெற் றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்க ளின் கருத்துக்களுக்கு இணங்க மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் உறுதி” என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது, பண் பட்ட ஜனநாயக மாண்பினை வெளிப்படுத்துகிறது. 

அதுமட்டுமல்ல, அவரது அறிக்கையில், “நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை  உணர்ந்து திமுக அரசு தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டிருப் பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரிகள்.

இந்திய நாட்டில் தொழில் அமைதி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முற்றாக சீர்குலைந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அடியோடு ஒழிக்கும் விதத்தில், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புச் சட்டங்களாக மாற்றி, பெரும் கார்ப்பரேட் முதலா ளிகளின் கொடிய சுரண்டலுக்கு சேவகம் செய்து வருகிறது மோடி அரசு. அத்தகைய அரசை ஆட்சி யிலிருந்து அகற்றுவது,  இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படைக் கடமையாகும்,  இத்த கைய சூழலில், மேற்கண்ட சட்டமுன்வடிவை முழுமையாக ரத்து செய்து,  தொழிலாளர் வர்க்க நலன் காக்கும் பாதையில் திமுக அரசு உறுதி யோடு பயணிக்கட்டும்.