குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 160 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்துவிட்ட பாஜக 6-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது.
2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வெட்கமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 பேரை விலைக்கு வாங்கி தனது எண்ணிக்கையை பாஜக உயர்த்திக்கொண்டது. நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னும் பின்னும் குஜராத்தில் பிரதமரின் செயல்பாடுகள் நியாய மற்றவை. மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏராளமான அறிவிப்பு கள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் என, பிரதமர் அனைத்தையும் செய்து முடிக்கும்வரை தேர்தல் ஆணையம் காத்திருந்து தேர்தல் தேதியை அறிவித்தது. பெரிய நகரங்களில், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக, உள்ளூர் பாஜக தாதாக்களுடன் இணைந்து காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
பணபலம், ஆள்பலம், உள்ளூர் செல்வாக்கு என வேட்பாளர்களை பாஜக தேர்வு செய்துள் ளது. மறுபுறம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜகவை தோற்கடிக்க ஆர்வமே இல்லாமல் உள்ளது. அக்கட்சி தீவிரமாக களத்தில் இறங்க வேண்டும்.
குஜராத் மக்களைப் பொறுத்தவரை, மோடி வாக்கு கேட்டு வரும்போதெல்லாம் கடந்த காலத்தில் வெளிப்படுத்திய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் இந்த முறை இதுவரை காட்டவில்லை. குஜராத் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் 2002 முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
இந்த பிரிவினர் வேலைவாய்ப்பு, சிறந்த நிர்வாகம், நல்ல வாழ்க்கையை விரும்புகிறார் கள். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங் கத்தால் உலக அரங்கில் இந்தியா நம்பிக்கை யுடன் முன்னேறி வருகிறது என்ற புளித்துப் போன பேச்சை புதிய வாக்காளர்கள் கேட்கத் தயாராக இல்லை.
ஒவ்வொரு தேர்தலின்போதும் 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கி 149 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற சாதனையை பாஜக முறிய டிக்கும் என்று மோடியும் அமித்ஷாவும் கொக்க ரிப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் இந்த பேச்சை காணோம். எனவே பாஜகவுக்கு கடும் சவாலைத் தரும் வகையில் குஜராத் தேர்தல் களம் அமைந்துள்ளது. அதனால்தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதறு கிறார்கள். கதறுகிறார்கள்.