இந்தியாவில் அவசர நிலைக்காலம் அமல்படுத்தப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளன. இன்னமும் கூட அந்தக் கால கட்டம் ஒரு கொடும் நினைவாகவே இந்திய மக்கள் மனதில் நிலைத்துள்ளது. ஜனநாயக உரி மைகளின் குரல்வளை நெரிக்கப்பட்ட அந்தக் காலம் ஒருபோதும் திரும்பி விடக்கூடாது என்பது தான் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் எண்ண மாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த நாளை யொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், அவசர நிலையை எதிர்த்து நம் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த, உழைத்த, துணிச்சல் மிக்க அனை வருக்கும் தலை வணங்குகிறேன் என்றும், இந்தக் காலம் அரசியலமைப்புச் சட்டம் கொண்டா டும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
அவசர நிலைக்காலத்தில் கடுமையான தணிக்கை முறையை தீக்கதிர் ஏடும் எதிர்கொண் டது. இரட்டைத் தணிக்கை முறைக்கு ஆளா னது. எனினும் உண்மையின் பக்கம் நின்று போரா டியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதி காரப்பூர்வ ஏடான தீக்கதிர். ஜனநாயகத்தை பாது காக்கும் போராட்டத்தில் தொடர்ந்து தொய் வின்றி செயல்படுவது குறித்து தீக்கதிர் பெரு மிதம் கொள்கிறது.
ஆனால் அரசியலமைப்புச் சட்டம் கொண் டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது என்று அவசர நிலைக் காலத்தை குறிப்பிடும் பிரதமர் தம்முடைய ஒன்பதாண்டு கால ஆட்சிக் காலத்தில் ‘அரசியலமைப்புச் சட்டத்தை எந்தளவுக்கு உயர்த்தி பிடித்துள் ளேன்’ என்று கூற முடியுமா? மோடி தலைமையி லான ஆட்சி என்பது குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலமாகவே உள்ளது.
பத்திரிகைகள் நேரடியாக அன்று அச்சுறுத் தப்பட்டன. இன்று ஊடகங்களும், சமூக ஊட கங்களும் மறைமுகமாக அச்சுறுத்தப்படு கின்றன. ஒட்டுமொத்த ஊடகத்தையும் ஒன்றிய ஆட்சியாளர்களின் ஆதரவோடு தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகள், ஊடக ஜனநாயகத்தை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா தொடர்ந்து சரிந்து வருகிறது.
அவசர நிலைக் காலத்தின் போது எதிர்க் கட்சித் தலைவர்களும், தொழிற்சங்கத் தலை வர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இப்போது ஒன்றிய புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏவி விடப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமை கள் சட்டத்தொகுப்புகளின் மூலம் பறிக்கப்படு கின்றன. அரசியலமைப்புச் சட்ட விழுமியங்க ளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன் றவை அரிக்கப்படுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க் காது. ஜனநாயக தீபம் சுடர்விட இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.