பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான கௌதம் அதானி மீதான குற்றச் சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. இந்த நிலையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள இரண்டு விமான நிலையங்களின் கணக்கு வழக்குகள் குறித்து கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அதி காரிகள் விசாரணை நடத்தியதாக செய்தி வெளி யாகியுள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமே ஆகும். நிதி ஆயோக் மற்றும் பொருளாதார விவகா ரங்கள் துறையின் கடும் ஆட்சேபணையையும் மீறி ஆறு விமான நிலையங்களை அதானிக்கு தூக்கி கொடுத்தது மோடி அரசு. அதானிக்கு விமான நிலையங்களை தர விரும்பாத உரிமை யாளர்கள் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனைக்குள்ளா க்கப்பட்டு மிரட்டப்பட்டனர். மும்பை விமான நிலையங்களை மிரட்டி பறித்து அதானிக்கு கொடுத்தது மோடி அரசு. ஆனால் இப்போது அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெய ரளவுக்கு விசாரணை என்ற பெயரில் திசைத் திருப்பும் உத்தியில் மோடி அரசு ஈடு பட்டுள்ளது. அதானி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வ றிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கள் வலியுறுத்தின. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கக்கூடாது என்பதற்காகவே ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தை திட்ட மிட்டு முடக்கினர். அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஒன்றிய ஆட்சியாளர்களால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை ஏவிவிடப்படு கிறது. ஆனால் ஹிண்டன்பர்க் மோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம லாக்கத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுப்ப தைக் கூட மோடி அரசு தடுத்துவிட்டது. இப்போது வேறு வழியில்லாமல் அதானி குழு மத்தின் மீது நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்வதற்காகவே மும்பை விமான நிலையங் களில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவ தில்லை. ஒருவேளை விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் வேண்டுமானால் மாற்றப்படலாம். மோடி அரசின் முறைகேடுகளை வெளிப்படு த்திய சிஏஜி அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள் ளது இதற்கு சாட்சியாகும். உண்மையை வெளிக் கொணர்வதில் மோடி அரசுக்கு துளி கூட அக்கறை இல்லை. தன்னுடைய கூட்டாளி களை ஒளித்துவைப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக இருக்கிறது.