headlines

img

அறநிலையத்துறையின் மீது ஏன் இந்த ஆத்திரம்?

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருப்பதையே பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே இந்து சமய அற நிலையத்துறையை கலைப்பதுதான் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அரற்றி வரு கிறார். அந்தக் கட்சியைச்சேர்ந்த தலைவர்க ளில் ஒருவரான எச்.ராஜா கோயிலுக்குச் சென்று வழிபடுகிறாரோ இல்லையோ இந்து சமய அற நிலையத்துறையின் மீது அன்றாடம் ‘அர்ச்சனை’ நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் இவர்க ளது கண்களை மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆகிய உயர் பொறுப்பில் உள்ளவர்களை யும் கூட புலம்ப வைத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், அதுபோல சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தை கையிலெடுக்க முடியுமா என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்பேசினார். 

இதே போன்று தமிழகத்தில் உள்ள ஒவ் வொரு கோயிலிலும் சொத்துக்களை திருடி வரு கிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்குப் போகின்றன என்று தெரியவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்துக்குப் போய் ஆதார மில்லாமல் அவதூறு செய்துள்ளார்.

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரக் களத்திற் கும், தமிழக திருக்கோவில்கள் நிர்வாகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. வழக்க மான தங்களுடைய வெறுப்பு அரசியல் பிரச்சா ரத்தின் ஒரு பகுதியாகவே இந்து சமய அறநிலையத் துறையின் மீது தாக்குதல் தொடுக்கிறது பாஜக.

நிர்மலா சீதாராமனின் பொய்ப் புகார்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு விரிவான பதில் அளித்துள்ளார். பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தமிழ்நாட்டின் மேற்கொள்ளப் படும் முயற்சிகளை முடிந்தவரை நீதிமன்றத்தின் மூலமாக தடுக்க முயல்கிறார்கள். அறநிலையத் துறை இல்லாவிட்டால் கோயில் சொத்துக்களை முன்பு போல கொள்ளையடிக்கலாம்; கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போடும் சிலர் தான் அறநிலையத் துறையின் மீது அவதூறு செய்கிறார்கள்.

தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிதம் பரம் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள், சாதி அடிப்படையிலான அட்டூழியங்களை நாட றியும். அதேபோல அனைத்து கோயில்களையும் மாற்ற வேண்டும் என்பதே இவர்கள் திட்டம். பாஜகவின் நோக்கம் பக்தி அல்ல என்பதை தமிழ்நாடு நன்கறியும்.