headlines

img

தமிழக பட்ஜெட்- அறிவிப்பும் எதிர்பார்ப்பும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யிலான அரசு அமைந்த பிறகு முதலாவது முழு நிதி நிலை அறிக்கையை மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

முதல்வர் பதவியேற்ற உடனேயே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஐந்து வாக்குறுதி கள் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சர் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தொலைநோக்குத் திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் பெரு மளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே திமுக அரசு பொறுப்பேற்றது. தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வரி மற்றும் நிதி பங்கீட்டை யும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வழங்க வில்லை. 15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையி லும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறை வாகவே உள்ளது. மேலும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திற்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில்தான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த பத்து மாவட்டங்களில் 4ஆயிரத்து 694 கி.மீட்டர் அளவுக்கு கால்வாய்களை தூர்வார ஒப்புதல், வட்டி யில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி, நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புக்கு ரூ.2,787 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா கடைமடைப் பகுதி கள் வரை தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

 தமிழகத்தில் தொல்லியல் பணிகளை ஒன்றிய அரசு புறக்கணித்து வரும் நிலையில், ஏழு இடங்க ளில் அகழ்வாய்வும், இரண்டு இடங்களில் தல ஆய்வும் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும், தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீ டும், விழுப்புரம், இராமநாதபுரத்தில்  அருங்காட்சி யகம் அமைக்கவும் அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

அரசு பள்ளிகள் மற்றும் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஊக்கத் தொகையாக ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ.1000 வழங்கப் படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன் என்று பாடிய வள்ளலார் பெயரில் பல்லுயிர் இன பாதுகாப்புக்காக காப்பகம் அமைக்க ரூ.20 கோடி, பெரியார் சிந்தனைகளை பல்வேறு மொழி களுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு திட்டம் போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பும் இடம் பெற வில்லை. நிரந்தர வேலை வாய்ப்பை பெருக்கு வதற்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தொடர் கவனம் செலுத்திட வேண்டும்.