தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி அரசுப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்காதது குறித்து ஆசி ரியர்கள், கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள் ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய மாணவர்களையும் தனியார் பள்ளியில் சேர்த்த பின்னர்தான் அரசுப்பள்ளி யில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குகி றார்கள். அரசுப்பள்ளிகளில் தான் மாணவர்கள் சிறப்பாகப் படிக்க முடியும் என்பதைக் கடந்த சில ஆண்டுகளாகப் பெற்றோர்கள் உணரத்தொடங்கி யுள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர் சேர்க்கை தொடங்காதது சரியல்ல.
ஜூன் 2ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப் படும் என்பதால், மே மாதத்தில் மாணவர் சேர்க்கை யைத் தொடங்கினால் தான் அவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியர் தேவை கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திட்டமிட முடியும். கடந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்த போதும் கூட, மே மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது.
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள். இவற்றில் 11 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு களுக்கு இன்னும் 5 வேலை நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
அரசுப் பள்ளிகளில் தற்போது கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகம் முதல் காலணி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. கொரோ னா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்க ளைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைக ளைத் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக ளுக்கு மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுத லாகச் சேர்ந்துள்ளனர்.
தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக் காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற் றோர் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கியிருந்தால், நடப் பாண்டும் வழக்கத்தைவிடக் கூடுதலாகப் பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பார்கள். அந்த வாய்ப்பை அரசுப் பள்ளிகள் இழந்து கொண்டி ருக்கின்றன.
எனவே, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உட னடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பணிகளை மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் கண்காணிக்கவேண்டும்.