headlines

img

முகமூடிகளுக்குப் பின்னால்...

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் ஆயுதங்களுடன் புகுந்து மூன்று மணி நேரம்  வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கின்றனர். அதில் மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள் பலரும் படுகாயமடைந்திருக்கிறார்கள். 

பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமின்றி, விடுதிகளுக்குள்ளும் நுழைந்து அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அந்த ரத்தவெறிக் கும்பல் வெளியேறிய பின்னரே துணைவேந்தரால் காவல்துறை அழைக்கப்பட்டு கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.  இப்போது துணைவேந்தர், மாணவர்கள் மோதலை கைவிட்டு செமஸ்டர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்; அமைதி காக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மாணவர்களின் கோரிக்கையான தேர்வுக் கட்டணத்தை குறைப்பதற்கும், நீண்ட நாள் போராட்டம் நடத்தியதால் தேர்வை தள்ளி வைப்பதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் மேற்கண்ட அறிக்கையை விடுத்தி ருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வா கத்தின் கீழ் செயல்படும் காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி அணிந்த வன்முறை கும்பல் நுழைந்தது எப்படி? அந்த நேரத்தில் காவல்துறையை உடனே அழைக்காமல் துணைவேந்தர் என்ன செய்து கொண்டிருந்தார்?  இத்தகைய கேள்விகள் நடைபெற்ற கொடூ ரத் தாக்குதல் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்ப தையே உணர்த்துகிறது. அத்துடன் வாட்ஸ்அப், வீடியோ பதிவுகள் ஆகியவற்றில் இடதுசாரிக ளுக்கு எதிராக ஒன்றுபடு என்று கூறும் காட்சிக ளும் பரப்பப்பட்டிருப்பது இதனை தெளிவுபடுத்து கிறது. எனவே இந்தத்தாக்குதலில் ஈடுபட்ட குண் டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அத்துடன் உரிய வகையில் ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்களை தடுக் காமல் இருந்த துணைவேந்தரை நீக்கிட வேண்டும். 

ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாக போராட்டம் நடத்தினால், அதை தவிர்ப்பதற்கு அந்த நிர்வாகம் எத்தகைய முயற்சியும் எடுக்காத நிலையில், இத்தகைய முகமூடி அணிந்த குண்டர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்துவது என்பது மத்திய பாஜக அரசின் மறைமுக அச்சுறுத்தல் நடவடிக்கையன்றி வேறென்ன? 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதைப் போல ஜேஎன்யுவிலும் தொடர விடக்கூடாது என்பதற்கான மிரட்டல் நடவடிக்கையாகவே இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது.  இது நாஜிக்கள் நடத்திய தாக்கு தலை நினைவுபடுத்துவது போல் உள்ளது. இத்தகைய ரத்தவெறி முகமூடித் தாக்குத லுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. அரசுக்கு எதிரான குரலை ஒடுக்குவதற்காக முகமூடிகளின் பின்னால்ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்துவது பாசிஸ்ட்டு களின் உண்மை முகத்தையே வெளிப்படுத்துகிறது. 

;