headlines

img

தமிழகத்தின் தலைநகரை ஆட்டிப்படைக்கும் கொரோனா

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரு வதை அரசு புள்ளி விவரங்களே காட்டுகின்றன. அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று வேகமா கப் பரவுகிறது. தமிழகத்தின்  மிகப் பெரிய காய்கறி, பழம், மலர், பூ அங்காடியான கோயம்பேட்டில் மக்க ளும் வியாபாரிகளும் தனிமனித இடைவெளியில் லாமல் கூடியபோது சென்னை மாநகராட்சியும் சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தன. இதனால் சென்னையிலிருந்து பல மாவட்டங்களு க்கு இந்நோய் பரவியது.

அந்த சந்தை மூடப்பட்டு ஒருமாதமாகியும் இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை. அரசு நிர்வா கம் எவ்வளவு வேகமாக வேலைசெய்கிறது என்ப தற்கு இதுவே சான்று . தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைவாக இருந் தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படு கிறது. கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழி சைக்கும், பழச்சந்தையை மாதவரத்திற்கும் அரசு மாற்றியபோதும், சென்னையில் வைரசின் தொற்று குறையவில்லை.  

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் வெள்ளி யன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். இதுவும் அரசு சொல்லும் புள்ளிவிவரங்கள் தான். தென்னிந் தியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படும் காஞ்சி புரம் மாவட்டத்தில் பல கார் தொழிற்சாலைகளில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தால்  அந்த நபருக்குச் சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம், சிறுநீரக கோளாறு  உள்ளிட்ட உபாதை கள் இருந்து மரணித்தால் அந்த உபாதைகளால் மரணம் ஏற்பட்டதாகப் பதிவு செய்கிறார்கள். 

நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அல்லது அறிகுறியுடன் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பின்னர் சிகிச்சை தொடங்கு வதற்கு சில மணி நேரங்களிலேயே இறந்து விடு கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாகச் சுகாதார கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தமிழகத்தில் இவ்வளவு மரணங்கள் என்பது அரசின் நடவடிக்கை களைக் கேள்விக்குறியாக்குகின்றன.

பலர் பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்கு முன்பே மரணிக்கின்றனர்.  நடுத்தர வயதினர் பலர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மரணம் அடைந்து வருவது அந்தத் துறையின் செயல்பாடு கள் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு பொது மருத்துவமனையின் தலைமை செவிலியர் இறந்துவிட்டார். அவர் கடந்தமாதம்ஓய்வுபெற்று பணி நீட்டிப்பு காரணமாக கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். கொரோனா உறுதி செய்யப் பட்ட அவர் மாரடைப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்ததாக மருத்துவ ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலையை உணர்ந்து அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு  மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.

;