headlines

img

ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்பட வேண்டும்

இந்தியாவை ஊழலிலிருந்து விடுவிப்பதே மத்திய புலனாய்வுத் துறையின் முக்கியக் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  ஒன்றிய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐ அமைப்பின் வைர விழாவில் பேசிய அவர், ஊழல் என்பது ஒரு சிறிய குற்றமல்ல; இது ஏழைகளின் உரி மைகளை பறிப்பதுடன் மேலும் பல குற்றவாளிகள் பிறக்க வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய புலனாய்வுத் துறையை தன்னுடைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கான கருவிகளில் ஒன் றாக மாற்றியுள்ள பிரதமர் இவ்வாறு பேசியுள்ளது வியப்பளிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய பாஜக அரசின் அங்கங்களில் ஒன்றாக மாற்றப்பட்டு அவற்றின் சுயேட்சைத்தன்மை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க வும், தாங்கள் தொடர்புடைய வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவும், மத்திய புலனாய்வுத்துறை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. சிபிஐ தலைமைப் பொறுப்புக்கான நியமனம் என்பதே சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக நீட்டி முழக்குகிறார் பிரத மர் மோடி. ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தனது அரசின் அரசியல் ஆர்வம் குறையவில்லை என்று கூறுகிறார். ஆனால் ரபேல் ஊழல் துவங்கி தற்போது அதானி மோசடி வரை மத்திய புல னாய்வுத்துறையும், அமலாக்கத்துறையும் எந்தள வுக்கு செயல்பட்டது என்பதை நாடறியும். 

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு முதல் குஜராத் வன்முறை வழக்கு வரை சிபிஐ எந்தள வுக்கு பாரபட்சமாக செயல்பட்டது என்பதற்கு வெளி வந்த தீர்ப்புகளே சாட்சியமாகும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஒருவர் கூட தண்டிக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல, அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூட சிபிஐ தயாராக இல்லை.

அதானியின் மோசடியை விவாதிக்கக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்கும் ஆளும் கட்சியினர், அமலாக்கத்துறை யிடம் எதிர்க்கட்சியினர், மனு கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்களது ஏவல் அமைப்புகளாக மாற்றி எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிடுகிறது மோடி ஆட்சி.

இந்த நிலையில் ஊழலுக்கு எதிராக பிரதமர் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஜனநாய கம் மற்றும் நீதித்துறைக்கு மிகப் பெரிய தடை யாக ஊழல் இருக்கிறது என்றும் ஊழலிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டிய பொறுப்பு சிபிஐக்கு உள்ளது என்றும் பிரதமர் பேசி யுள்ளார். அதற்கு முதலில் ஆளுங் கட்சியின் பிடியிலிருந்து மத்திய விசாரணை அமைப்புகளை விடுவிக்க வேண்டும். அதனுடைய சுயேட்சைத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் நவீன தாராள மயக் கொள்கையை பின்பற்றிக் கொண்டே ஊழலுக்கு எதிராக முழக்கம் செய்வது வெறும் ஏமாற்று வேலையே ஆகும்.