பாரதிய ஜனதா கட்சி என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படுகிற ஒரு கட்சி யாகும். இந்துத்துவா கருத்தியலை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திலும், அரசு நிர்வாகத்திலும் புகுத்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். அந்த அமைப்பின் கட்டளைக்கு ஏற்பவே, நரேந் திரமோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்கான தற்போதைய உதாரணம் தான், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி அமைப்பை புறக்கணித்துவிட்டு ஒன்றிய அரசு நேரடியாக பல்வேறு துறை களில் இணைச் செயலர் மற்றும் துணைச் செயலா ளர்களுக்கான பதவி நியமனத்திற்கு விளம்பரம் செய்திருப்பதாகும். 45 பதவிகளுக்கு விண்ணப்பங் கள் நேரடியாக கோரப்பட்டுள்ளன. தனியார் துறை யில் பணியாற்றிய அனுபவம் வேண்டும் என்ப தொன்றே இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இரண்டாவதாக, எந்தவிதமான இடஒதுக்கீட்டு முறையும் இந்தப் பதவிகளுக்கான நியமனத்தில் பின்பற்றப்பட மாட்டாது. இதன் மூலம் நீண்ட நெடுங்காலமாக போராடிப் பெற்ற பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் கொள்ளி வைக்கிறது மோடி அரசு.
கார்ப்பரேட் முதலாளிகளின் கையாட்களை யும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை யும் அரசு நிர்வாகத்தில் நேரடியாக நியமிப்பதற்கான ஏற்பாடே இது. ஒன்றிய அரசால் பல்வேறு துறை களில் இணைச் செயலாளர்களாக தனியார் நிறு வனங்களில் பணியாற்றியவர்கள் நேரடியாக நியமிக்கப்படும் போது, அந்தத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றி அனுபவம் பெற்ற வர்களுக்கான பதவி உயர்வு மறுக்கப்படும் அநீதி யும் இதில் சேர்ந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் படி, தன்னார்வ லர்கள் என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேர்வழி களை கல்விக் கூடங்களில் ஊடுருவச் செய்ய வழிவகுத்துள்ள மோடி அரசு, மறுபுறத்தில் நேரடியாக அரசு நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு கதவு திறந்துவிடுகிறது.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அங்கம் வகிக்க தடையில்லை என ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
பொதுத்துறை நிறுவனங்களை அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் அந்தத் துறைகளின் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான வேலை வாய்ப்பு களை பறித்துவிட்டது நரேந்திரமோடி அரசு. இப் போது அரசுத் துறை வேலைவாய்ப்பையும் பறிப்ப தற்காக இந்த ஆபத்தான ஏற்பாட்டை மோடி அரசு செய்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட விரும்பு வோர், அரசு நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்க விழைவோர், வேலைவாய்ப்பை எதிர் நோக்கியுள்ள இளைஞர்கள் என அனைவரும் இணைந்து போராடி இந்த முயற்சியை முனை மழுங்க வைக்க வேண்டும்.