headlines

img

அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை

 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தைச் சரிசெய்ய ஒன்றிய அரசு சுயசார்பு இந்தியா திட்டத்தை அறி வித்தது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில் சிறுகுறு நடுத்தர  நிறுவனங்க ளுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்க 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் 45 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடை யும் என்று கூறப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசமானதுதான் மிச்சம். உள்நாட்டு நிலைமை இப்படி இருக்க நாட்டின் வெளி நாட்டு வர்த்தக நிலையோ இதை விட மோசமாக உள்ளது. 

இறக்குமதி 12.3 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில் ஏற்றுமதி 6.2விழுக்காடு  மட்டுமே உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்தியா வின் வர்த்தக பற்றாக்குறையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் பற்றாக் குறை கடந்த மாதம் 31.46 பில்லியன் டாலர்க ளாக  அதிகரித்தது.  இது எதிர்பார்ப்பை விட 20.50 பில்லியன் டாலர்கள் தான் அதிகம் என்று அரசு ஆதரவு பொருளாதார நிபுணர்கள் கூறி னாலும் நாட்டின் பொருளாதார  நிலைமை மிக மோசமாக உள்ளதே உண்மை. 

கடந்த ஆண்டு அக்டோபரில் சரக்கு  ஏற்றுமதி 31.60 பில்லியன் டாலர்  என்ற அளவில்  இருந்தது. இந்தாண்டு அதே அக்டோபர் மாதம்  சரக்கு  ஏற்று மதி 33.57 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது கடந்தாண்டைவிட வெறும்  2பில்லியன் டாலர் கள் தான் அதிகம்.  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு இது  ஒரு சாதனை அளவல்ல. சரக்கு பொருட்கள் இறக்குமதியுடன் ஒப்பிடும் போது ஏற்றுமதி அளவு மிகமிகக் குறைவே. கடந்த நிதியாண்டில், சீனாவுக்கான இந்தி யாவின் ஏற்றுமதி சுமார் 28விழுக்காடு குறைந்து 15.32 பில்லியன் டாலராக இருந்தது.  அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி கடந்த நிதியாண்டில் 4.16விழுக்காடு அதி கரித்து 98.51 பில்லியன் டாலராக இருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக இடை வெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரசாங்கத் தரவுகளின்படியே  கடந்த  மாதம் நாட்டின் இறக்குமதி 65.03 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சீனாவில் இருந்து பெருமளவு இறக்குமதி அதி கரித்துள்ள நிலையில்  ஏற்றுமதி ஏன் அதிகரிக்க வில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி னால் சர்வதேச விவகாரங்களைக் கூறி அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. 

மொத்தத்தில்  உள்நாட்டில் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்ற முழக்கமும் எடுபடவில்லை.  வெளிநாட்டு ஏற்றுமதியை அதி கரிப்போம் என்ற முழக்கமும் எடுபடவில்லை.