இராக்கில் இருந்து வெளியேறி விட்டதாக அமெரிக்கா சொல்லிக் கொண்டாலும், பல ராணுவ முகாம்களை அங்கு அமைத்துள்ளன. அந்த முகாம்கள் மீது ஈரான் ஆதரவு அமைப்பு கள் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறி, அமெ ரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே பிற நாடுகளில் அதிக அளவு ராணுவத்தினரை நிறுத்தியிருக்கும் நாடான அமெரிக்கா, நேரடியாக போரில் ஈடுபட்டிருக்கும் அல்லது அந்தப் போரில் ஒரு பக்கம் சார்ந்து நிற்கும். மற்ற நாடுகள் எல்லாம் போர்ப்பயிற்சி யில் ஈடுபடுவது வழக்கம். அமெரிக்கா மட்டும், போரைத் தொழிலாகவே செய்து வருகிறது.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் மோத லில் உக்ரைனின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது. உக்ரைனுக்கு உதவி செய்கிறோம் என்ற பெய ரில் ஏராளமான ஆயுதங்களை அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் தயாரித்தன. அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகள் அந்த ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு அனுப்பி வருகின்றன. போர் நின்றால் அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் வருமானம் நின்றுவிடும். இதனால் அடுத்த போர் முனையைத் தேடி அமெரிக்கா செல்வது போன்ற சமிக்ஞைகள் தெரிகின்றன.
இஸ்ரேல்-காசா மோதலில் அமெரிக்கா எதிர்பார்த்தது போன்று பிற மேற்காசிய நாடுக ளுடன் மோதல் உருவாகவில்லை. இதனால் தென் சீனக்கடல் மற்றும் ஈரான்-இராக் பகுதிக ளில் மோதல்களை உருவாக்கும் முயற்சி நடக்கி றது. தென் சீனக்கடலில் அப்பகுதியில் உள்ள நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்சனையை விசிறிக் கிளறும் வேலையில் இறங்கியுள்ளனர். சீனாவைக் காட்டி, ஆயுதங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெ ரிக்கா அழுத்தம் தருகிறது.
தற்போது இராக்கின் பல பகுதிகளில் அமெ ரிக்கப் படைகள் நடத்தியுள்ள தாக்குதல்கள், ஈரான், இராக் நாடுகளுக்கிடையில் மோதலைத் தூண்டுவதற்காகவே நடந்திருக்கிறது. அமெ ரிக்காவின் விருப்பப்படி, இத்தகைய மோதல் உருவானால், இராக் தலையில் ஏராளமான ஆயு தங்களைத் திணிக்க முடியும். அமெரிக்க ஆயுத பெரு நிறுவனங்களின் லாபம் எகிறும். மேற்கு ஆசிய நாட்டு மக்களின் தலை மீது சுமை ஏறும்.
சர்வதேச விவகாரங்களில் போர் மட்டுமல்லா மல், தலையீடு, மிரட்டல், தூண்டுதல் உள்ளிட்ட அமெரிக்க நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்துமே தோற்றே போயுள்ளன. வெற்றி யோ, தோல்வியோ, தனது ஆயுதப் பெரு நிறுவ னங்களின் ஆயுதங்கள் விற்றனவா, இல்லையா என்பதுதான் அமெரிக்காவுக்கு முக்கியம். அமைதியே பாதுகாப்பைத் தரும்; போர் தராது என்று உலகம் முழுவதும் இடதுசாரிகள் வலி யுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் நிரந்தரத்தீர்வு என்பதை போர் முனைகள் நிரூபித்து வருகின்றன.