headlines

img

வேகம், விவேகம் தேவை!

உத்தரகண்ட் மாநில சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி யில் தற்போது முதல் வெற்றி கிடைத்துள்ளதாக மீட்புக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு நிறு வனத்தின் இயக்குநர் அன்ஷூ மனீஷ் கால்கோ, தற்போது ஆறு அங்குல அகல குழாய் இடிபாடு கள் வழியாக 53 மீட்டர் தொலைவுக்கு செலுத்தப் பட்டுள்ளது முதல் வெற்றி என குறிப்பிட்டுள்ளா

இதன் மூலம் உணவுப் பொருட்கள், தொழிலா ளர்களும் மீட்புக்குழுவினரும் பரஸ்பரம் காண முடியும் வகையில் சிறிய கேமரா சாதனம் அனுப் பப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளர்கள் பேசு வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கி றது. இது ஒரு முன்னேற்றம் தான். 

ஆனால் இடிபாடுகளுக்கு இடையே துளை யிட்டு குழாய் கொண்டு செல்வது, அதன்மூலம் தொழிலாளர்களை ஊர்ந்த நிலையில் வெளியே வரச் செய்வது என்பதே மீட்புக்குழுவின் திட்ட மாக உள்ளது. ஆனால் இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இதன் மூலம் உணவுப் பொருட்கள், தொழிலா ளர்களும் மீட்புக்குழுவினரும் பரஸ்பரம் காண முடியும் வகையில் சிறிய கேமரா சாதனம் அனுப் பப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளர்கள் பேசு வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கி றது. இது ஒரு முன்னேற்றம் தான். 

இந்நிலையில் மீட்புப் பணிக்காக ஜெனீவா வைச் சேர்ந்த நிபுணர் அர்னால்டு  டிக்ஸ் உத்தர காசி வந்துள்ளார். தற்போதைய மீட்புப் பணிகள் திருப்தியளிக்கின்றன. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.  ஆனால் இந்த மீட்புப் பணி எத்தனை நாள் நீடிக்கும் என்று அவர் கூறவில்லை.

ஏனெனில் இமயமலை பகுதிகள் மிகவும் இள மையான காலத்தைச் சேர்ந்தவை என்பதால் உறுதியற்ற தன்மையில் உள்ளன. அதில் இயற் கையின் நியதிகளுக்கு மாறாக துளையிடுதல், குழி தோண்டுதல், கட்டிடங்கள் அமைத்தல் போன்றவற்றை நிகழ்த்தும் போது அவை எதிர் வினைகளையே ஏற்படுத்துகின்றன என்பதை ஜோதிர்மட் இடிபாடுகள் ஏற்கெனவே உணர்த்தி யுள்ளன. 

ஆயினும் அதனை பொருட்படுத்தாமல் புனி தத் தலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதி மேம்பாடு, தூர குறைப்பு மற்றும் நேர குறைப்பு என்று கூறி இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி 4.5 கிமீ தூரத்திற்கு திட்ட மிட்டதே சரியானது தானா? இந்தக் கேள்வியை  மாநில, ஒன்றிய பாஜக இரட்டை இன்ஜின் அரசு கள் அலட்சியப்படுத்தியதே இதற்கு காரணம். நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பழமை வாதத்தை பலப்படுத்திடும் முயற்சிகளுக்கு வழி கோலுவது இத்தகைய இடிபாடுகளுக்கும் மனித உயிரிழப்புகளுக்குமே வாய்ப்பாக அமையும் என்பதால் தவிர்க்கப்படுதல் அவசியம்