headlines

img

பாஜகவை அகற்றலே பாதுகாப்பு

உ.பி.,மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, “முந்தைய ஆட்சியின்போது இந்த மாநி லம் இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு குண்டர்க ளின் அட்டூழியம் நிறைந்த பிற்படுத்தப்பட்ட மாநி லமாக இருந்தது. ஆனால் தற்போது உ.பி., முன்னேற்றப் பாதையில் வேகமாகப் பயணித்து வருகிறது” என்று அடித்துக் கூறியுள்ளார். உ.பி., மாநிலம் யோகி ஆதித்யநாத் ஆட்சி யில் எந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது நட்டா பேசிய அன்றைய தினமே அம்பலமாகிவிட்டது.

பனாரஸ் இந்து பல் கலை.ஐஐடி மாணவி ஒருவர் நவம்பர்-1 அன்று இரவு, வளாகத்துக்கு அருகிலேயே பாஜகவைச் சேர்ந்த மூவரால் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவர்கள் மூவரும் டிசம்பர் 31 அன்று தான் கைது செய்யப்பட்டனர். அதுவும் கடு மையான போராட்டங்களின் நிர்பந்தத்தால். அவர்கள் மூவரும் பாஜக தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நெருக்கமான வர்கள். இதில் ஒருவர் பிரதமரின் தொகுதியில் பிரச்சாரம் மற்றும் இதர பணிகளை கவனித்தவர் என்பதும் மற்றொருவர் உ.பி., பாஜக தலைவரின் உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யோகி ஆட்சியில் இப்படித்தான் உ.பி., மாநி லம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரிப்பில் இந்தியாவிலேயே முதலிடத்துக்கு முன் னேறியுள்ளது. அதைத்தான் நட்டா குறிப்பிட்டி ருக்கிறார் போல் தெரிகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. 2020இல் 3,71,503 குற்றங்கள், 2021இல் 4,28,278 குற்றங்கள். 2022இல் 4,45,256 குற்றங்கள். இதில் உ.பி.,தான் 67,743 குற்றங்களுடன் முதலிடம் பிடித்து யோகிக்கு பெருமை தேடியிருக்கிறது என்றால் இப்போது பனாரஸ் மாணவி பாலியல் வழக்கு மூலம் பிரதமர் மோடிக்கும் பெருமை சேர்ந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை, கொலை, கும்பல் பலாத்காரம் தொடர்பாக பதிவு பெற்று வழக்கு கள் உ.பி.,யில் 62 என்று முதலிடம் என்றால்  தொடர்ந்து வருவது 41 என ம.பி., இரண்டாமி டத்தில் உள்ளது. இதே உ.பி.,யில் பாஜக எம்எல்ஏ செங்கார், தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டார். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானது உ.பி.,யைச் சேர்ந்த பாஜக எம்.பி.,யால் தானே.  மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாண ஊர்வலம் பாஜக ஆட்சியில் இரவில் அல்ல, பக லிலும் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது என்பதைத்தானே உணர்த்துகிறது.  அதை மறைக் கும் நட்டாவின் பேச்சு வெறும் பசப்பு. மொத்தத்தில் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பெண்களுக்கு- மக்களுக்கு பாதுகாப்பு.