headlines

img

ஸ்டார்ட் - அப் !

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.  சிறிய நகரங்களில் கூட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வரத்து அதிகரித் துள்ளது.  2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரம்  5 டிரில்லியன் டாலரை எட்டும் எனப் பிரதமரும், நிதி அமைச்சரும்  இடைவிடா மல் பேசி வருகின்றனர்.  இந்தியப் பொருளாதாரத்தின் ஒளிரும் நட்சத்திரங்களாக வர்ணிக்கப்பட்ட  ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பைஜூஸ் மற்றும் பேடி எம். இவை இரண்டுமே தற்போது இருளில் மூழ்கி யிருக்கிறது.

பேடிஎம் இன் பேமெண்ட் வங்கியின் விளம்பர தூதுவராக வந்தவர் பிரதமர் மோடி. 2021ஆம் ஆண்டிலேயே பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மோசடிகள் அதிகரித்தது மட்டுமல்ல, சட்டவிரோத பணப் பரி வர்த்தனையும் நடந்திருப்பதையும் உறுதி செய்த ரிசர்வ் வங்கி, அந்த அறிக்கையை பிரதமர் அலு வலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பியது. அதன் பின்னரும் கூட  அமலாக் கத்துறை ஆய்வு நடத்தவில்லை. ஒரே பான்  எண்ணில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்திருக்கின்றன.

அதில் பல்லா யிரங்கோடி பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது. இதுதான் பாஜக சட்டவிரோத பணபரிவர்த்னை யை தடுத்த லட்சணம்.  இதேபோல்தான் பைஜூஸ் விவகாரத்தில் அதனைக் கண்காணிக்க வேண்டிய ஒன்றிய கல்வி அமைச்சகமும், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகமும் கைகட்டி வேடிக்கை பார்த்தன. இதனால் அந்நிறுவனத்தை நம்பி பணத்தைப் போட்டவர்கள் பல்லாயிரங்கோடிகளை இழந்தி ருக்கின்றனர். தைரோகேர் நிறுவனர் வேலுமணி மட்டும் ரூ.1400 கோடியை இழந்திருக்கிறார்.

இதில் பாஜகவின் நெருங்கிய கூட்டாளியும், பைஜூஸ் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான மோகன்தாஸ் பையின் கைங்க ரியமும் உள்ளடங்கியிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவ னங்களில் 70 சதவீதம் தோல்வியைத் தழுவியி ருக்கிறது. மீதமிருக்கும் நிறுவனங்களும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல்  திணறு கின்றன. தினமும் வேலை நீக்கச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023இல் கூடுதலாக 40 சத விகிதம் ஊழியர்களை ஸ்டார்ட் அப் நிறுவனங் கள் பணியிலிருந்து நீக்கியிருக்கின்றன. இந்த லட்சணத்தில்  2030க்குள் 14 கோடிப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என மோடி உறுதியளித்திருக்கிறார்.

மோடி ஆட்சியில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என போலி புள்ளி விபரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றாக  நீர்க்குமிழி போன்று உடைவது தற்போது ஸ்டார்ட்- அப் ஆகியிருக்கிறது.