மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்த சில உறுப்பினர்கள் வியாழனன்று விடைபெற்ற னர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நடை பெற்ற பொருளாதார சீரழிவு குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கறுப்பு அறிக்கையை சுட்டிக் காட்டினார். அருமையாக நடந்து கொண்டிருக் கும் ஆட்சியின் மீது பொல்லாதவர்களின் கண் பட்டுவிட்டதாம். இதற்காக திருஷ்டி (காலா தீக்கா) கழிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.
அந்த கறுப்புத் தாளை அவைக்கு கொண்டு வந்ததன் மூலம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அந்த வேலையை செய்து முடித்து விட்டாராம். தங்களின் சாதனைகளைப் பற்றி பேச வக்கற்ற மோடி நாடாளுமன்றத்தில் பேசும் போது கடந்த 10 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறை வேற்ற என்ன செய்தோம் என்பதை ஒருபோதும் பேசியதில்லை. நேரு ஆட்சியில் துவங்கி இந்திரா காந்தி ஆட்சிவரை திட்டித் தீர்ப்பதே அவரது வழக்கமாகிவிட்டது.
இதைத்தான் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெள்ளையறிக்கை என்ற பெயரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்லியே நேரத்தைப் போக்கினார். கடந்த கால ஆட்சியா ளர்கள் பொருளதாராத்தை சீரழித்து விட்டார் கள் என்றால் அதை சீரமைக்கத்தானே உங் களை மக்கள் தேர்ந் தெடுத்தார்கள் என்று கேட் டால், காங்கிரஸ் செய்த தவறுகளை கடந்த 10 ஆண்டுகளாக சரிசெய்து கொண்டிருக்கிறார் களாம்.
இன்னும் அந்த வேலை முடியவில்லை யாம். கூடுதலாக 5 ஆண்டுகள் தேவைப்படுவதால் மீண்டும் எங்களை தேர்ந்தெடுங்கள் என்று மக்க ளிடம் கேட்கிறார்கள். 10 ஆண்டு காலம் செய்யாத வர்கள் இனி மேலா செய்யப் போகிறார்கள்? இவர்களது பத்தாண்டு கால ஆட்சியில் “இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 விழுக்கா டாக சரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் 10விழுக்காடாக அதிகரித்துள்ளது. மாநிலங்களு க்கு வழங்கவேண்டிய நியாயமான நிதிப்பகிர்வை வழங்காமல் மாநில அரசுகளை ஒன்றிய அர சிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். மோடி ஆட்சியில் தான் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் குறை பாடுள்ள ஜிஎஸ்டி போன்றவற்றால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன. கோடிக்கணக்கான விவசாயிகள் விவசா யத்தை இழந்து விவசாய கூலித் தொழிலாளியாக மாறிவிட்டனர். விவசாயிகளின் வருவாயை இரட்டிப் பாக்குவதாக வாக்குறுதி அளித்த மோடி அரசு அதை நிறைவேற்றவில்லை. இதுதான் இவர் கள் செய்த சாதனை. இவற்றையெல்லாம் மோடி அரசின் வெள்ளையறிக்கை திட்டமிட்டு மறைத்து விடடது. எனவே அது வெள்ளையறிக்கை அல்ல; பொய்களின் திரட்டு. வெள்ளை இருட்டு.