headlines

img

இறுகும் பிடி!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.  12.5 கிலோ எடை கொண்ட ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4190, ஒரு கிலோ பால் பவுடர் ரூ,1945, ஒரு டீ யின் விலை 100 என  விற்கப்படுகிறது. மக்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது. பட்டினி சாவிலிருந்து எப்படித்  தற்காத்து கொள்வது என தெரியாமல் சாதாரண மக்கள் படும் துன்பம் சொல்லிமாளாது. 

இவ்வளவிற்கும் காரணம் இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் அரசின் அலட்சிய மான அணுகுமுறையே ஆகும். கடந்த 10 ஆண்டு களாகவே இலங்கையில்  நிதிப்பற்றாக்குறையும் வர்த்தகப் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான எந்த உருப்படியான முயற்சியையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.  மாறாக உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு என  ராஜபக்சே அறிவித்ததோடு,  ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடை  விதித்தார். இந்த திடீர் நடவடிக்கையால் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டதோடு, உணவுப் பொருட்க ளையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. 

இப்படி முன் திட்டமிடாத ராஜபக்சே அரசின் நடவடிக்கையால் தற்போது இலங்கை அரசு இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக இலங்கையின் மொத்த ஜிடிபியில் 10 சதவிகிதம் சுற்றுலாத் துறையைச் சார்ந்து இருக்கும். மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் 52 சதவிகி தமும், தேயிலை 17 சதவிகிதமும் இடம் பெறும். ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இவை மொத்தமாக முடங்கியது. இதன் விளைவு 2020ஆம் நிதியாண்டில் ஜிடிபி மைனஸ் 16.3 சதவிகிதமாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 

நவீன தாராளமய பொருளாதார கொள்கையை பின்பற்றும் இலங்கை, வர்த்தகம் என்பது ஒருவழி பாதையல்ல என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தவறியிருக்கிறது. எந்தளவிற்கு இறக்குமதி இருக்கிறதோ, அதே அளவில் ஏற்றுமதியும் இருக்க வேண்டும். அப்போதுதான் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால்  கச்சா எண்ணெய் முதல் பால்பவுடர் வரை இறக்குமதியை நம்பும் நிலைதான் தொடர்கிறது.  

இலங்கையில் உள்ள தமிழர்கள் யுத்த காலத்தில் உயிருக்குப் பயந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அதே போன்றதொரு நிலை தற்போது,  போர் இல்லாத நிலையிலும், பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இலங்கையிலிருந்து 16 தமிழர்கள் உயிரைப் பணயம் வைத்து தமிழகம் வந்திருக் கின்றனர். இலங்கையிலிருக்கும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட உலக நாடுகள் முன்வர வேண்டும். குறிப்பாக இலங்கை அரசு இனப் பாகுபாட்டோடு நடந்து கொள்ளாமல் தமிழர்களைப் பாதுகாத்திட முன்வர வேண்டும். அதனை இந்திய அரசு உறுதி செய்திட வேண்டும்.