headlines

img

மின்சாரம் நிரந்தரம்; தொழிலாளி தற்காலிகமா?

தூத்துக்குடியில் உள்ள என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த ஏழு நாட்க ளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகில இந்திய அளவில் மின்சாரத்துறையில் போர்க்குணத்துடன் உறுதி யோடு நடந்து வருகிற தொடர் போராட்டம் இது என்று கூறினால் மிகையல்ல.

என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் எனும் என்டிபிஎல் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி யில் அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நிரந்தரமான தன்மை கொண்ட மின் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இந்நிறுவனம் தொடர்ந்து  ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைத்தி ருக்கிறது. இது தொடர்பாக பல கட்டப் போராட் டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாக எட்டப் பட்ட தீர்ப்புகளையும் கூட அமலாக்க மறுக்கிறது. 

உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் தொழி லாளர்களை தங்கள் இஷ்டத்திற்கு அமர்த்து வது, துரத்துவது என்ற கொடிய சுரண்டல் கொள்கையை ஈவிரக்கமின்றி அமலாக்கி வருகிறது. அதை தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுத்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களும் தீவிரமாக அமலாக்கி வருவதுதான் தற்போதைய மிகப் பெரும் பிரச்ச னையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து உற்பத்தித்துறைகளிலும் காண்ட்ராக்ட்மயம் என்பது இந்த காலகட்டத்தில் மிக பிரதான பிரச்ச னையாக எழுந்துள்ளது. 

இந்தியாவில் மொத்த உழைப்புப் படையில் 1997-98 காலகட்டத்தில் காண்ட்ராக்ட் தொழி லாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது; 2017-18இல் இது 36.4 சதவீதமாக அதிகரித்தது. தற்போது இன்னும் கூடுதலாகியுள்ளது. நிரந்தர தன்மை வாய்ந்த உற்பத்தித்துறைகளிலும் தொழிலாளி தற்காலிகம்தான் என்பது மிகக் கொடிய தாக்குதல் ஆகும். காண்ட்ராக்ட் தொழில் களுக்கான பாதுகாப்பு விதிகளையும் கூட சமீ பத்திய புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்க ளின் மூலம் பாஜக ஆட்சியாளர்கள் காலி செய்து விட்டனர். புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் ஆளும் வர்க்கங்களின் மூலதனத்தின் நலன்களை பாது காப்பதற்கான கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன. 

மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல, “பொருள் உற்பத்தி நடைமுறையின் முதன் மையான செயல்பாட்டாளராக தொழிலாளி இருந்த நிலை மாறி, அந்த உற்பத்தி நடை முறையின் ஒரு ஓரத்தில் அவர் நிறுத்தப்படுகிற நிலைமை உருவாகும்” என்பது இன்றைக்கு நடைமுறையாக மாறியிருக்கிறது. அதைத்தான் தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தி லும் பார்க்கிறோம். மின்சாரம் நிரந்தரம், மின்சார உற்பத்தியும் நிரந்தரம், ஆனால் மின் தொழிலாளி மட்டும் தற்காலிகமா? என்ற கேள்வியை ஆவேசத் துடன் எழுப்பியவாறு  போர் முழக்கம் செய்திருக்கி றார்கள் அந்த தொழிலாளர்கள். வெல்லட்டும் அவர்களது போர்.