headlines

img

போரை உடனே நிறுத்துக!

உலக அரங்கில் அதிகாரப்பூர்வ போர் அறிவிக்கப்படாமலே குற்றுயிரும் குலையு யிருமாக ஒரு நாடு ஆக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது பாலஸ்தீனம் தான்; குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய அதீ திவிர வலதுசாரி - பாசிச பெஞ்சமின் நேதன்யாகு  அரசாங்கத்தின் ராணுவத்தால் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு கடந்த பல மாத கால மாக கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது. காசா திட்டு முழுவதும் இஸ்ரேலிய ராணுவத் தால் முற்றுகையிடப்பட்டது; காசா பகுதியை ஆளுகிற ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்கள் குறி வைத்து கொல்லப்பட்டனர்; அல்- அக்சா  மசூதி மீது குண்டுமழை பொழியப்பட்டு ஏராள மான மக்கள் படுகொலை செய்யப்பட்ட னர்; எழுத்தில் வடிக்க முடியாத அளவிற்கு துயரத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர் காசா மக்கள். 

பொறுத்து பொறுத்துப் பார்த்த காசா மக்களும் அவர்களுக்கு தலைமையேற்றுள்ள ஹமாஸ் இயக்கமும், கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறை யாக மிகத் தெளிவாக வியூகம் வகுத்து, இஸ்ரே லின் அதிநுட்பம் வாய்ந்த உளவு அமைப்பு களின் கண்களை மறைத்து, அக்டோபர் 7  சனிக் கிழமை அதிகாலை இஸ்ரேலைச் சுற்றி வளைத்து சரமாரியான ஏவுகணை தாக்கு தலை நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், தனது ராணுவத்தின் நூற்றுக்கணக்கா னோரை இழந்தது. இந்த அதிரடி தாக்கு தலை, காசா மக்களில் பலரும் ஹமாஸ் இயக்கத் தினரும் ‘பாலஸ்தீன விடுதலை நாள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இந்த அதிரடிக்கு பதிலடி என்ற பெய ரில் இஸ்ரேல் முன்னெப்போதையும் விட அதி தீவிர தாக்குதலை நடத்தும் என்பது இவர்கள் அறியாதது அல்ல. அதன்படியே, இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களாக காசாவை சுற்றி  வளைத்து சல்லடையாக துளைத்துக் கொண்டி ருக்கிறது. அதிகாரப்பூர்வமாக போர் என அறி வித்து இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் பாலஸ்தீன மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். 

இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், காசாவுக்காக குரல் கொடுக்கும் ஹமாஸ் இயக்கத்தின் செயலை வழக்கம்போல ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று முத்திரை குத்தி யுள்ளன. அதன்மூலம் இஸ்ரேலின் போர்த் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் அனைத்து விதமான வசதிகளுடனும் கூடிய ராணுவத்தைக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் தங்களது உயிருக்காகவும் சொந்த மண் ணுக்காகவும் மோதுகிறார்கள். இரண்டு தாக்குத லும் ஒன்றல்ல. எனினும் ஹமாஸ் தற்போதைய தாக்குதல் நிலைப்பாட்டை தவிர்த்திருக்க வேண் டும். போர் தொடுத்துள்ள இஸ்ரேல் உடனடி யாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாலஸ்  தீன மக்களுக்காக ஐநா சபையும் இந்தியா உள்ளி ட்ட நாடுகளும் உடனடியாக இஸ்ரேல் போரை நிறுத்திக் கொள்ள வற்புறுத்தவேண்டும்.