headlines

img

தகரும் நம்பிக்கை

இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) அதிகார வரம்பில் குறிப் பிட்ட அளவில் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்; அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்று மட்டுமே நீதிமன்றம் விசாரணை செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றி லேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றியிருக்கிறது; பங்கு விலையை செயற்கையாக அதிகரித்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது என்று  ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. இத னால் அதானி குழுமத்தின் பங்குகள் 85 சத விகிதம் வீழ்ச்சியடைந்தது.

ஆனாலும் ஹிண் டன்பர்க்  நிறுவனத்திற்கு எதிராக அதானி குழுமம் நீதிமன்றத்தை நாடவில்லை. இந்த மோசடியை விசாரிக்க அமைக்கப் பட்ட  நீதிபதி சாப்ரே தலைமையிலான குழு, அதானி குழுமத்திற்கு எதிரான “முதன்மை யான” ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று முடித்துக் கொண்டது. ஆனால் ஆதாரமே இல்லை என்று மறுக்கவில்லை.

இந்நிலையில்தான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான “ஓசிசிஆர்பி (OCCRP)” அமைப்பு மொரீஷியஸ் வழியாகப் போலி நிறுவனங்கள் மூலமாக எப்படியெல்லாம் அதானி குழுமம் மோசடி செய்தது என்பதை அம் பலப்படுத்தியது. குறிப்பாக  கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி  3 போலி நிதி நிறு வனங்கள் (ஷெல் நிறுவனங்கள்) மூலம்  முதலீடு செய்திருப்பதை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியது. மேலும்  அதானி குழுமத்தினரே 76 சத விகிதத்திற்கு மேல் பங்குகளை வைத்தி ருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

பங்கு பத்திர ஒப்பந்தங்கள் ( ஒழுங்குமுறை) விதிகளின் படி 25 சதவிகித பங்குகளை பொது முதலீட்டாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். விதி 19ஏ -இன் படி 76 சதவிகித பங்குகளை அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களே வைத் திருப்பது பங்குகளின் விலையைச் செயற்கை யாக அதிகரிக்கும் செயலாகக் கருதப்படும். அதன் அடிப்படையில் கூட அதானி குழுமத் தின் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையிலும் செபியின் அதிகார வரம்பில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி யிருப்பதில் நீதி இருப்பதாக தெரியவில்லை.

ஓசிசிஆர்பி அமைப்பு 30 நாடுகளில் உள்ள 150 பத்திரிகையாளர்களுடன் இணைந்த உலக ளாவிய வலைப்பின்னல் கொண்டது.இதுவரை அந்த அமைப்பு 398 ஊழல்களை அம்பலப் படுத்தியிருக்கிறது. இதில் 621பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர். 131 பேர் பதவிகளை ராஜி னாமா செய்திருக்கின்றனர். அந்த அமைப்பின் அறிக்கையை புறங்கையால் தள்ளுவது நீதிக்கு அழகல்ல. ஆய்வு செய்வதற்கு மாறாக உச்சநீதி மன்றம் அநீதிக்குத் துணைபோகக் கூடாது.