குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்ற பொ துத் தேர்தல் மற்றும் 5 மாநிலங்களில் ஆறு சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக தோல்வி யடைந்து 15 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த மாந கராட்சியை அந்தக் கட்சி இழந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கும் போது பாஜகவின் தோல்வி துவங்கியிருக்கிறது என்றே கூற முடியும்.
குஜராத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. கடந்த தேர்தலை விட பாஜக கூடுதல் இடங் களை பெற்றிருக்கிறது. ஆனால் எளிதாக இந்த வெற்றியை பாஜக பெற்றுவிடவில்லை. தோல்வி பயத்தில் பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்ச ரும் குஜராத்தை சுற்றிச் சுற்றி வந்ததோடு, தங்களது வழக்கமான வெறுப்பரசியல் பிரச்சாரத்தையும், மூர்க்கமாக முன்னெடுத்தார்கள்.குஜராத்தை தொ டர்ந்து மதவெறிமயமாக்கி வந்துள்ளதன் தொடர் ச்சியாகவே இந்த தேர்தலிலும் பாஜகவின் பிரச்சார வியூகம் அமைந்திருந்தது.
பாஜகவின் வெற்றிக்கு ஆம் ஆத்மி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஏ கட்சியும் உதவியுள்ளன.
பாஜகவுக்கு மாற்றை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவு உணர்த்துகிறது. வாய்ப்பிருக்கும் இடங்களில் மக்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை பாஜகவின் பாணியி லேயே பிரச்சாரம் மேற்கொண்டது. ஊழல் எதிர்ப்பில் துவங்கப்பட்ட அந்தக் கட்சி ஊழலை கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, மிதமான வகுப்புவாதக் கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறது. மதச்சார்பற்ற அரசியல் மூலமாகவே மதவெறியை முற்றாக முறியடிக்க முடியும் என்பதை அந்தக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.
தில்லி மாநகராட்சியை பறிகொடுத்தது மட்டு மல்ல, இமாச்சலப்பிரதேச மாநில ஆட்சியையும் பாஜக பறி கொடுத்திருப்பது நல்ல அறிகுறியாகும். அங்கு காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. எனினும் பாஜகவின் குதிரை பேர அர சியல் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
உ.பி., பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆறு சட்டமன்ற தொகுதிக ளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்எல்டி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூஜனதா தளம் ஆகிய கட்சிகளே வென்றுள்ளன. உ.பி. மாநிலம் மெயின்புரி மக்கள வைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாதிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குஜராத் வெற்றியை கொண்டாட முடியாத நிலைக்கு பாஜகவை தள்ளியுள்ளது. மதச்சார்பற்ற கட்சி களிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அதி கரித்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி.