பண்டிகை மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரி விப்பதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த தீபாவளி, கடந்தவாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை யின் போது தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருந் தது. வரும் பொங்கல் பண்டிகையின் போதும் இந்த நிலைமையில் மாற்றம் இருக்கப்போவதில்லை. காரணம் காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 3ஆயிரத்திற்கும் அதிக மான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் அடிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்ற னர்.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று அரசு எச்சரித்தாலும் அதை யெல்லாம் எந்த நிறுவனமும் கண்டுகொள்வ தாகத் தெரியவில்லை. பண்டிகை நாள்கள் மட்டு மின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தா லும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாக மாறிவிட்டது. அரசுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைக ளும் முன்பதிவு செய்யப்பட்டதைத் தெரிந்து கொண்டே இதுபோன்ற கட்டணக் கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களின் ஒரே வாய்ப்பு தனியார் ஆம்னி பேருந்துகள்தான். எப்படியாவது ஊருக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற மனநிலை யில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளி டம் தனியார் ஆம்னி பேருந்துகள் பகல், இரவு என்று பாராமல் கட்டணக் கொள்ளை அடித்து வருவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதி லும் தொடர் விடுமுறை நாள்களில் வழக்கமாக இருக்கும் கட்டணங்களைவிட மூன்று மடங்கு உயர்த்தப்படுகிறது.
இது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அது அப்போதைய பேசு பொருளாக மாறுவதோடு சரி, அடுத்த பண்டிகை அல்லது விடுமுறை நாளில் கட்டணக்கொள்ளை தொடர்கிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே. “தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள் களைப் போலவே சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பொது விடுமுறை நாள்களிலும் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அரசு சிறப்புப் பேருந்து கள் கட்டாயம் இயக்கப்பட வேண்டும். அத்துடன் வார நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் என எல்லா நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் வசூ லிக்க வேண்டிய பயணக் கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்.