சமூகத்திலிருந்து சாதிவெறி, சமத்துவமின்மை மற்றும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். சமூக ஆணவம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகிய இரண்டுக்கும் முடிவு கட்ட வேண்டும். சமூக இணைப்புக்கான பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். இப்படி பேசியிருப்பது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான். சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றும் எனச் செயல்படுவதே இவர்களது வாடிக்கையாகிவிட்டது.
சமூகத்தில் சாதியை உருவாக்கியவர்கள் சில சாமியார்கள் (பிராமணர்கள்) தான் என்று அண்மையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்எஸ்எஸ் அதன் பரிவாரங்கள் நம்பிக்கை வைத்து செயல்படுவது எல்லாம் சனாதனம் எனும் நால்வர்ண சாதிய அமைப்பு முறைதான்.அத னால்தான் பிறவியிலேயே சாதி கற்பிக்கப்பட்டு சாதிரீதியான ஏற்றத்தாழ்வு சமூகத்தில் உருவாக் கப்பட்டுள்ளது. அதனாலேயே சாதிவெறி, சாதி ஆணவம் ஆகியவை தலைவிரித்தாடுகிறது. அதன் விளைவுதான் காதல் திருமணங்கள் செய்ப வர்களை தங்கள் பிள்ளைகள் என்றும் பாராமல் கொலை செய்யும் கொடூரங்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.
பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் வர்ணா சிரம சாதிய அமைப்பு முறையை ஒழிக்காமல், இவர்கள் அரசியல் சட்டம் போல் கடைப்பிடிக் கும் மனுஸ்மிருதியை ஒழிக்காமல், அரசியல் அமை ப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்கிற கோட் பாட்டை ஏற்காமல் இந்தியாவில் சமத்துவமின் மையை, தீண்டாமையை ஒழிக்க முடியாது. சமத்து வத்தை ஏற்படுத்தவும், நிலைபெறச் செய்யவும் முடியாது.
சமூகத்தின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார பிரிவாக குடும்பம் உள்ளது. இந்த குடும் பங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி சமூகம் மற்றும் நாட்டை வலிமையாக்க ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது. இதற்காக குடும்ப புரொபோதன் திட்டங்களை நடத்தி வரு கிறது என்றும் பகவத் கூறியிருக்கிறார்.
உண்மையில் குடும்பங்களிடையே ஒற்று மையை, நல்லிணக்கத்தை குலைக்கும் வேலை யையே ஆர்எஸ்எஸ்சும் அதன் பரிவாரங்களும் செய்து வருகின்றன. இவர்கள் கூறும் குடும்ப ஒற்றுமை இந்துக்களிடையேயான ஒற்றுமையே. அதுவும் மற்ற மதத்தினர் மீதான வெறுப்பு ணர்வை ஏற்படுத்துவதே. அத்துடன் குடும்பங்க ளிடையே தேசியவாதம் பற்றிய உணர்வு விழித் தெழச் செய்யப்படும் போது நாடு வலிமைய டையும் என்று மோகன் பகவத் கூறுவது குடும்பத் தில் உள்ள பெண்களையும், வன்முறை மற்றும் கல வரங்களில் ஈடுபடுவதற்கு தூண்டுவதே ஆகும். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இவர்கள் நடத்திய வன் முறை வெறியாட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் பெண்கள் எவ்வாறு நடந்து கொண்டார் கள் என்பது நாடறிந்த ஒன்றாகும்.
அண்மையில் தமிழ்நாட்டின் ராசிபுரத்தில் பெண் தொண்டர்களுக்கு ஒருநாள் பண்பாட்டு ஒழுக்கப் பயிற்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக் கது. எனவே நாட்டு மக்கள் இவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.