தாராள சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோரிடையே உள்ள கிராக்கிக்கு ஏற்ற விதத்தில் பொருட்களை அளிக்காமல், அதைப் பெறுவதற்கு நுகர்வோரிடையே போட்டியை ஏற்படுத்துகிறது முதலாளித்துவம்; இதன்மூலம் அது தேவையானவர்கள் தேவையான பொரு ளைப் பெற முடியாமல் நுகர்வோரை (மக்களை) அந்நியப்படுத்துகிறது என்கிறார் மாமேதை மார்க்ஸ்.
முதலாளித்துவம் அளவில்லாத லாபத்தை குவிக்கும் பொருட்டு, பற்றாக்குறையை ஏற்படு த்தி அந்தப் பொருளுக்காக பெரும் போட்டியை உருவாக்குவதன் மூலமாக குளிர்காய்கிறது.
முதலாளித்துவத்தின் பொருளாதார விதி களில் ஒன்றான இது, முதலாளித்துவ-நிலப்பிரபுத் துவ சமூக அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. லட்சக் கணக்கில் காலிப் பணியிடங்கள் இருந்தாலும், அவற்றை நிரப்பாமல் மிகப்பெரிய அளவிற்கு வேலையில்லா பட்டாளத்தை தனது ‘இருப்புப் படையாக’ வைத்திருக்கிறது. எல்லோருக்கும் கல்வி கொடுக்க போதிய அளவு நிதி ஒதுக்கா மல், அதிக அளவில் கல்விக் கூடங்களை திறக்காமல், இடப்பற்றாக்குறையை ஏற்படுத்தி மக்களை ஒருவருக்கொருவர் மோதவிடுகிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்ற பிரச்சனை யையும் இந்தக்கோணத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொன் னுலகம் மலரும் வரையிலும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் இத்தகைய துயரங்கள் நீடிக்கும். எனவே தற்போதைய திட்ட வட்டமான சூழலில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவு களைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு கட்டாயம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட வலியுறுத்துகிறது.
சமூக அடிப்படையிலும் பொருளாதார அடிப் படையிலும் மிக நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள சாதிகள் மற்றும் வர்க்கங் களுக்கு, சமூகத்தில் நாமும் தற்போதைய நிலை யிலிருந்து சில வாய்ப்புகளைப் பெற்று புதிய நிலைக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை யை அளிக்கிற ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதுதான் இடஒதுக்கீடு என்று மார்க் சிஸ்ட் கட்சி பார்க்கிறது.
இந்தியாவில் ஆளும் வர்க்கங்கள், குறிப்பாக தற்போதைய ஆளும் கட்சியான பாஜக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் நிரந்தரமாக வைத்துள்ள பற்றாக்குறையால் எழுந்துள்ள போட்டியைப் பயன்படுத்தி தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் 10% இடஒதுக்கீடு பிரச்சனையை கையாண்டிருக்கிறது. இது வாய்ப்பு மறுக்கப் பட்ட சாதிகள் மற்றும் வர்க்கங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கீட்டின் மீதான தாக்கு தலே. இந்தத் தாக்குதலில் இருந்து, வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதிகளாகவும், வர்க்கங்களாக வும் உள்ள பாட்டாளி மக்களை பாதுகாப்பதே நம்முன் உள்ள கடமை.