அமெரிக்காவின் வரி வெறி: இந்தியாவின் வர்த்தக அவலம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் 25% இரும்பு-எஃகு வரி இந்தியாவுக்கு 8,400 கோடி ரூபாய் அடியாக பாய்ந்துள்ளது. “அமெரிக்காவே முதல்” என்ற கொள்கையின் பெயரில் உலக வர்த்தகத்தையே கைப்பாவையாக்கி விட்டார் டிரம்ப். இதன் காரணமாக நமது எஃகு ஏற்றுமதி யில் 85% வீழ்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல - 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை அழித்துவிடும் அளவுக்கு பெரிய பாதிப்பு.
இந்த நெருக்கடிக்கு இந்திய அரசின் பதில் என்ன? அமெரிக்க ஆப்பிள்களின் மீது 50% வரி விதிக்கிறது இந்தியா ; அரிசியின் மீது 80% வரி விதிக்கிறது; இரும்பு விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அடிமைத்தனமான நிலைப்பாடு?
26,000 ரூபாய் விலை கொண்ட எஃகுத் தட்டுக்கு இப்போது 6,500 ரூபாய் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் சிறு வியாபாரிகள் திவாலாகின்றனர். 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பொறியியல் துறை சார் ஏற்றுமதியில் பாதி அபாயத்தில் இருக்கிறது.
அமெரிக்காவிடம் இருந்து சீனா 54% எ ஃகு வரியை எதிர்கொண்டாலும், உலக எஃகு உற்பத்தியில் 50% கட்டுப்பாடு வைத்திருக்கிறது. அவர்கள் இந்த வரியை “வர்த்தகப் போர்” என்று அறிவித்து எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால் இந்தியாவின் 14.5 கோடி டன் உற்பத்தி யில் வெறும் 95,000 டன் மட்டுமே அமெரிக்கா வுக்கு அனுப்புகிறோம். இது இந்திய ஏற்றுமதி நிலையின் அவலத்தைக் காட்டுகிறது. சந்தை வேறுபாடு இல்லாததால் ஒரே நாட்டையே சார்ந்திருக்கும் நிலை இப்போது இந்தியாவுக்கே எதிராக மாறியுள்ளது.அமெரிக்காவிடம் இருந்து சீனா 54% எ ஃகு வரியை எதிர்கொண்டாலும், உலக எஃகு உற்பத்தியில் 50% கட்டுப்பாடு வைத்திருக்கிறது. அவர்கள் இந்த வரியை “வர்த்தகப் போர்” என்று அறிவித்து எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால் இந்தியாவின் 14.5 கோடி டன் உற்பத்தி யில் வெறும் 95,000 டன் மட்டுமே அமெரிக்கா வுக்கு அனுப்புகிறோம். இது இந்திய ஏற்றுமதி நிலையின் அவலத்தைக் காட்டுகிறது. சந்தை வேறுபாடு இல்லாததால் ஒரே நாட்டையே சார்ந்திருக்கும் நிலை இப்போது இந்தியாவுக்கே எதிராக மாறியுள்ளது.
இந்தியாவின் எஃகு துறை செயலாளர் “பாதிப்பு குறைவு” என்று பறைசாற்றுகிறார். ஆனால், அதே நேரத்தில் பொறியியல் ஏற்றுமதி கவுன்சில் “சிறு ஏற்றுமதியாளர்களின் பெரும் அழிவு” என்று கதறுகிறது. இந்த முரண்பாடு, மோடி அரசின் கொள்கையில்லாத நிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
“மாற்று சந்தைகளைத் தேடுவோம்” என்ற அரசின் பேச்சு வெறும் திசை திருப்பும் வேலை. ஐரோப்பாவும் ஆசியாவும் ஏற்கனவே பிற நாடு களின் இரும்பு எஃகு ஏற்றுமதியால் நிரம்பி வழி கின்றன. வியட்நாம் 46% வரியை எதிர்கொள் கிறது, சீனாவைப் போல வியட்நாமும் அமெ ரிக்காவிடம் இந்த பிரச்சினையில் நேரடியாக மோதுகிறது. ஆனால் மோடி அரசு டிரம்ப் அர சின் வரி அடாவடிக்கு எதிராக கருத்து சொல்லக் கூட மறுக்கிறது. இந்த நிலையில் இந்தியா எந்த சந்தையிலும் வெற்றி பெற முடியாது. எங்கு போனாலும் இந்த பலவீனம் பின்தொடரும்.
டிரம்ப்பின் வரி வெறி உலக வர்த்தகத்தை நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறது. இந்தியா பதிலடி கொடுக்காமல், மவுனம் காத்தால் அமெரிக்காவின் பொருளாதார அடிமை யாகவே இருக்கும் நிலை ஏற்படும். எனவே தேவை, தைரியமான பதிலடி, வலுவான உள்நாட்டுச் சந்தை, தன்னம்பிக்கையான வர்த்தகக் கொள்கை. மோடி அரசு அதைச் செய்யுமா?