headlines

img

சுற்றுச்சூழலை கெடுப்பது யார்?

நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் சூழலி யல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படு வதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளது நகைப்பிற்குரியது. இவருடைய அரசு பின்பற்றி வரும் கார்ப்பரேட் ஆதரவு நவீன, தாராளமயக் கொள்கைகளால் இந்தியாவில் சுற்றுச்சூழல் பெரும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது. இயற்கை வளங்கள் வகைதொகையின்றி சூறையாடப்படு கின்றன. வனங்கள் அழிக்கப்படுகின்றன. நீர் மாசு, காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்துவருகிறது.

யானைகள், புலிகள் பாதுகாப்பு என்பது அவசியமானது. அனைத்து வன உயிரிகளும் பாது காக்கப்பட வேண்டும். அவற்றின் எண்ணிக்கை பெருக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல்லுயிர் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதைத் தான் கொரோனா பெருந்தொற்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. ஆனால், கார்ப்பரேட் முத லாளிகள் கொள்ளையடிப்பதற்காக இயற்கை பாதுகாப்பு சார்ந்த அனைத்து விதிகளும் மீறப்படு கின்றன. 

அம்பானி, அதானி போன்றவர்களுக்கு இந்தி யாவின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க வரைமுறையின்றி அனுமதிக்கப்படுகிறது. சென்னைில் விமானநிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், விமான நிலை யங்கள், துறைமுகங்கள் அதானிக்கு தொடர்ந்து தாரை வார்க்கப்படுகின்றன.

அதானி குழுமம் அமைக்கும் துறைமுகங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறிவருகின் றன. சுற்றுச்சூழலுக்கும், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் உயிர்வாழ்தலுக்கும் பெரும் சவாலாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒன்றிய அரசு துடிப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிமுறையா? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதும், அந்த ஆலையை திறக்க வேண்டுமென அவர் மூலம் பேசுவதும் சுற்றுச் சூழலுக்கு உகந்த செயலா? 

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில் அங்கு அணுஉலைப் பூங்கா அமைப்ப தும் நாடு முழுவதும் கூடுதலாக அணுமின் உற்பத்தி நிலையங்களை துவக்க அறிவிப்பு வெளி யிடுவதும் சுற்றுச்சூழலுக்கு பயன் அளிக்குமா? 

வன நிலங்களிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு அந்த நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விடத் துடிப்பது ஒருபுறம், யானைகள், புலிகளுக்காக நடிப்பது  ஒருபுறம் என்பதுதானே பிரதமரின் நடைமுறை யாக உள்ளது. 

வளர்ச்சி என்று பிரதமர் கூறுவது கூட நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அல்ல. ஒரு சில முதலாளி களின் வளர்ச்சிதான். இந்நிலையில் சுற்றுச் சூழலை மனதில் கொண்ட வளர்ச்சி என பிரதமர் வாய்ப்பந்தல் போடுவது வெறும் வார்த்தை விளையாட்டே அன்றி வேறல்ல.