மோசமானதில் முதல் ஆட்சி!
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம் என்றும் பாஜக தலைமையிலான அரசு நல்லாட்சி மாற்றத்தில் தெளிவான கவனத்தைச் செலுத்தி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதப்பட்டுள்ளார். ஆனால் நாட்டு நடப்புகளும் நிகழ்வுகளும் சுதந்திர இந்திய வரலாற்றில் மிக மோசமான ஆட்சி என்றே பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆட்சி மதச்சார்பின்மையை, கூட்டாட்சி முறையை, அரசியல் சட்டமாண்புகளை சிதைத்து வருகிறது. வெறுப்பு அரசியலை, வன்முறை அரசியலை, பிரிவினை அரசியலை முன்னெ டுத்து துவேசத்தை பரப்பி ஒற்றுமையைச் சீர் குலைக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கை களிலேயே ஈடுபடுகிறது.
அரசியல் நாகரிகம், ஜனநாயகப் பண்புகள் சிதைக்கப்பட்டு புல்டோசர் ஆட்சியும் பெண்க ளுக்குப் பாதுகாப்பில்லாத அவலக் காட்சியும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. மதச்சார்பின்மை கைவிடப் பட்டு இந்துத்துவா ஒற்றைத் தன்மை திணிக்கப் பட்டு பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது. அத னால் தான் மத்திய, மாநில உறவுகள் கூட்டாட்சி முறையை எதேச்சதிகார மைய அதிகாரத்துவ ஆட்சி முறையாகச் செயல்படுத்துகிறது. முந் தைய ஆட்சியை குறை கூறுவதையே அரசியல் கலாச்சாரமாக கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது.
ஏழை, எளிய மக்களை அல்லல்படுத்திட ஏரா ளமான திட்டங்களை அறிவிப்பதும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் 1.76 கோடி குடும்பங்களை நீக்கியதும் நிதியைக் குறைத்ததும் தான் பாஜக ஆட்சியின் 11 ஆண்டு சாதனை. அதானி, அம்பானி உள் ளிட்ட கார்ப்பரேட் நண்பர்களுக்கு நாட்டின் வளங்களையும் துறைகளையும் திறந்து விட்டு அவர்களின் வளர்ச்சிக்கு வழிகோலுவதும் தான் இந்த 11 ஆண்டில் நடந்திருக்கிறது.
பயங்கரவாதமும் நக்சல் தீவிரவாதமும் ஒழிக்கப்பட்டு ஜம்மு- காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள் ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அளந்து விட்டுள்ளார். காஷ்மீர் துண்டாடப்பட்டு அமைதி சீர்குலைக்கப்பட்டதன் வெளிப்பாடு தான் பாதுகாப்புக் குறைபாடும் பஹல்காம் தாக்கு தலும் என்று ஒப்புக்கொள்ள முடியாமல் தான் உலக நாடுகளுக்கு விளக்கம் சொல்ல குழுக் களை அனுப்பியுள்ளது. பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் அமைதி திரும்பாது என்ப தற்கு பற்றி எரியும் மணிப்பூரே இன்றும் சாட்சி யாக உள்ளது.
நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்பு களையும், அரசியல் சட்ட அமைப்புகளையும் சீர்குலைத்து எதேச்சதிகார, நவபாசிச நடைமுறை யில் நாட்டை சீர்குலைப்பதில் முன்னணியில் இருப்பது தான் மோடி அரசின் சாதனை. இதை முறியடித்தால்தான் தீரும் இந்திய மக்களின் வேதனை!