headlines

img

சுருங்கும் ஜனநாயக வெளி

சிலந்தி வலை போன்ற வலைப் பின்னல் தொழில்நுட்பத்தில்  நாம் சிக்க வைக்கப்பட்டிருக்கி றோம்.  ஆனால்  இந்தியாவில் அரசியல் சர்வாதிகா ரத்திற்காக  டிஜிட்டல் சர்வாதிகாரமும் கை கோர்க்கத் துவங்கியிருக்கிறது. அதில் ஏற்படும் முரண்பாடுகளின் வெளிப்பாடுதான் டிவிட்டர் நிறுவனம் ஒன்றிய அரசிற்கெதிராக நீதிமன் றத்தை நாடியிருக்கும் நிகழ்வு. உண்மையில் டிவிட்டர் நிறுவனம்  கருத்துச் சுதந்திரத்திற்கா கத்தான்  நீதிமன்றத்தை நாடியிருக்கிறதா என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை. காரணம் கடந்த காலத்தில் டிவிட்டர் நிறுவனம்  ஒன்றிய அரசுடன் இணைந்து கருத்துச் சுதந்திரத்தை எப்படியெல்லாம் பறித்தது என்பதை அவ்வளவு எளிதாக ஒதுக்கிட முடியவில்லை.

மதவெறியைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்பான  சேவா பாரதிக்கு டிவிட்டர் நிறுவனம்  ரூ. 110 கோடியை வழங்கியது.  அதனை விமர்சனம் செய்தவர்களின் கணக்கை முடக்கி யது ஏன் ? என்ன காரணத்திற்காக   தில்லி விவ சாயிகள் போராட்டத்தைப் பதிவிட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. அவ்வளவு ஏன்? கொரோனா பரவலின் போது மக்களைப் பாதுகாக்கத் தவறிய மோடியைப் பதவி விலகக் கோரி டிரெண்டான ஹேஷ்டேக் ஏன் நீக்கப்பட்டது ? புல்லிபாய் வழக்கு உள்ளிட்ட எண்ணற்ற கேள்விகள் அணி வகுக்கின்றன. ஆனால் டிவிட்டரிடம் பதில்தான் இதுவரை இல்லை.

ஏற்கனவே டிவிட்டர் செய்து கொண்ட சமரசத்தின்  விளைவுதான்  தற்போதைய நெருக்க டிக்குக் காரணம் . ஒன்றிய அரசிற்கு எதிரான எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்த மோ, கருத்தோ இடம்பெறக் கூடாது என்ற அளவிற்கு   டிவிட்டரை மோடி அரசு நெருக்கு கிறது. 

குறிப்பாக உலகளவில் பிரபலமான வழக்கறி ஞர்களை  கொண்ட ‘ப்ரீடம் ஹவுஸ்’ குழு இந்தியா வின்  ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் பற்றிப்  பதிவிட்டிருக்கும் கருத்துக்களை நீக்கக் கோரு கிறது அரசு. அப்படி நீக்கினால் சர்வதேச நீதி மன்றத்திற்கு டிவிட்டர் நிறுவனம் பதில் சொல்லி யாக வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கவே டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. 

இது டிவிட்டருக்கும், ஒன்றிய அரசிற்கு மான பிரச்சனையல்ல. இந்தியாவில் கருத்துச்  சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து. நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.  முகநூல் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களின் டிஜிட்டல் சர்வாதிகாரமும், மோடியின் அரசியல் சர்வாதிகாரத்திற்காக  கைகோர்த்து நிற்கிறது. இந்த நிலை நீடித்தால் விரைவில் இந்தியாவின் சுதந்திரமும், சமத்துவ மும், ஜனநாயகமும் குழிதோண்டிப் புதைக்கப்படு வது தவிர்க்க முடியாது. இதனைத் தடுத்துநிறுத்தி இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்திட மோடி அரசின் எதேச்சதிகாரத்திற்கு  எதிராக அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.