headlines

img

அதிர்ச்சியளிக்கும் வெறுப்பரசியல்

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் பரப்பி வரும் வெறுப்பரசியல் புதிய புதிய பரிமாணங்க ளில் வெளிப்பட்டு வருகிறது. இவர்கள் நாட்டை எந்த திசையை நோக்கி நடத்திச் செல்கி றார்கள் என நினைக்கும் போது அச்சமாக இருக்கி றது. அத்துமீறும் இவர்களுடைய அநாகரிகத்தால் கருத்துரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை மட்டு மல்ல, அடிப்படை உரிமையான வாழ்வுரிமை கூட கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் கன வெட்டி என்ற இடத்தில் ‘ஜோசப் ஸ்டெய்ன் பிட்லர் ஆன் த ரூட்’ என்ற நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த இந்துத்துவா கும்பல் வீர சைவ மந்திரா எனும் இந்து மண்டபத்தில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த நாடகத்தில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த நாடகத்தை நடத்தக்கூடாது என நிறுத்தியுள்ளனர். இத்தகைய முட்டாள்தனமான  செய்கைகளுக்கு என்ன அர்த்தம்? 

இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்ற குறும்படத்தின் போஸ்டர் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது, நாடு முழுவதும் வழக்குகள் போட்டு அலைக் கழிக்க முயல்வது என்பது ஒருபுறம் இருக்க, ஒன்றிய அரசே நேரடியாக இந்த விசயத்தில் தலை யிட்டு கனடா அரசுடன் பேசி அந்த போஸ்டரை எடுக்க வைத்துள்ளது.

தங்களுக்கு பிடிக்காத கருத்தை வெளி யிட்டால் அதற்கான தண்டனையை இவர்களே தீர்மானித்துக் கொள்வது என்ற போக்கில் சென்றால் நாடு என்னவாகும்? 

தமிழ்நாட்டிலும் கூட  இந்த போக்கு தலை தூக்குகிறது. மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இந்துக் கோவில் தேரோட்டத் தில் பங்கேற்கக்கூடாது என பாஜக சட்டமன்ற உறுப்பினரே போராட்டம் நடத்துகிறார். இதை தேவையற்ற முறையில் பாஜக ஊதி பெரிதாக்க முயல்கிறது.

திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கில் அமைச்சர் மனோ தங்க ராஜ் பங்கேற்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் நாகூர் வேளாங்கண்ணி வழிபாட்டுத் தலங்களுக்கு இந்துக்கள் செல்வதையும், சபரி மலை ஐயப்பன் கோவிலில் ஏசுதாசின் குரல் ஒலிப்பதையும் பொருத் தமாக சுட்டிக்காட்டி வழக்குத் தொடுத்த வரை கண்டித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அணுகு முறைதான் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும். 

ஆனால் லக்னோவில் இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தில் மாமிசத்தை மடித்துக் கொடுத்ததாக ஒரு இஸ்லாமியரை கைது செய்தி ருப்பதும் நடந்துள்ளது. இத்தகைய அடக்கு முறைப் போக்குகளை ஒன்றிய அரசும், பாஜக மாநில அரசுகளும் ஊக்குவிப்பது ஆபத்தானது. மதச்சார்பின்மையின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.