headlines

img

நிரந்தர தீர்வு காண்க!

சமீபத்தில் தில்லையாடி, அத்திப்பள்ளி, வெற்றியூர் என அடுத்தடுத்து மூன்று இடங்களில் நேர்ந்திருக்கும் பட்டாசு வெடிவிபத்துகளில் 31  பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். ஒரு  தொழிலில் விபத்திற்கான ஆபத்து இருக்கு மெனில், அந்த விபத்து ஏற்படாத வகையில் பாது காப்பை உறுதி செய்வதும், தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால்  பட்டாசு விபத்துக்கள்  நடந்த இடங்களில் அந்த பாதுகாப்பும், கண்காணிப்பும்  உறுதி செய்யப்பட்டிருந்ததா  என்ற கேள்வி எழுகிறது. 

தீபாவளி நெருங்கும் நிலையில் குறுகிய கால இடைவெளியில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்யவும்,குடோன்களில் இருப்பு வைக்க வும் விதிகளை மீறும் போது விபத்துக்கள் நேரிடு கின்றன.  பட்டாசுக் கடைகளில்  சேமித்து வைக்கும் போது மேற்கொள்ள வேண்டிய  விதி களைக் கடைப்பிடிக்கத் தவறுவதும், கடைகளி லேயே பட்டாசுகளை உற்பத்தி செய்வதும் விபத்திற்குக் காரணமாக அமைகின்றன. 

இதனைக் கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய முழு பொறுப்பு  வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டு துறைக்கு இருக்கிறது. அந்தத் துறைகளில் உள்ள ஒருசில  அதிகாரி களின் அலட்சியமும் ஏழை, எளிய தொழிலா ளர்களின் உயிர்ப் பலிக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இனியேனும் கூடுதல் கண் காணிப்புடன் அதிகாரிகள் செயல்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1482 பட்டாசு ஆலைகளில் 1085 பட்டாசு ஆலைகள் விருது நகர் மாவட்டம் சிவகாசியையொட்டி இருக் கின்றன. மாநிலம் முழுவதும் 6,639 சில்லரை  பட்டாசு விற்பனை நிலையங்கள் இருக்கின் றன. எல்லா இடங்களிலும் விபத்துக்கள் நிகழ்வ தில்லை. எங்குப் பாதுகாப்பு விதிகள் மீறப்படு கிறதோ அங்கு மட்டுமே விபத்துக்கள் நேர்கின்றன. 

காலை 8 மணி முதல் 10 மணிக்குள் வெப்பத் தால் எளிதில் தீப் பற்றக்கூடிய வேதிப்பொருட் களின் மருந்து கலவைகளை முடிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதையும் மருந்துக் கலவை பயிற்சி பெற்ற “போர்மேன்”  மட்டுமே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மருந்துக் கலவையின் போது எளி தில் தீப்பற்றாமல்  இருக்க  வழி வகுக்கும். ஆனால் பல ஆலைகள் அதனைப் பின்பற்றுவதில்லை. 

குறிப்பாகப் பல பட்டாசு ஆலைகள் பண்டி கைக் காலம் நெருங்குவதால்  குறுகிய கால இடைவெளியில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்ய விதிகளை மீறுகின்றன. அதுவே விபத் திற்கும் காரணமாக அமைகிறது. 2018 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் மொத்தம் 32 வெடி விபத்துகளில்  54 பேர் பலியாகி யுள்ளனர். ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையி லிருந்து விதிகளையும், கண்காணிப்பையும் வலுப்படுத்திட வேண்டும்.