குற்றவியல் அடையாள விதிமுறை சட்ட முன்வரைவு மக்களவையில் கடும் எதிர்ப்புக் கிடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனிநபர்க ளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்து தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி ஒன்றிய பாஜக கூட்டணி அரசு இம் மசோதாவை நிறைவேற்றி யுள்ளது.
இந்த மசோதாவை நியாயப்படுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்நாட்டு பாது காப்பை வலுப்படுத்தவே இந்த சட்டத்திருத்தம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களது ஆட்சியில் உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஆட்சியை விமர்சிப்பவர்களை பழிவாங்கவும் சிறுபான்மை மக்களை குறி வைக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டம் பல்வேறு இன மக்களை குற்றப் பரம்பரைகளாக வகைப்படுத்தவே வகை செய்யும் என சமூகவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரை சட்டத்தின் பாதிப்பு இன்று வரை தொடருகிற அவலம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை குற்றப் பரம்பரைகள் என்று அவர்களது பிறப்பின் அடிப்படையில் வகைப்படுத்தும் கொடிய நடைமுறையின் நீட்சி யாக இந்தச் சட்டமும் மாற வாய்ப்பு உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்த சட்டத்தில் உள்ள இன்னொரு ஆபத்து தனிநபர்கள் குறித்த தரவுகள் கசியும் அல்லது அரசினாலேயே அளிக்கப்படும் என்பதாகும். இந்த சட்டத்தின்படி குற்றம் சாட்டப்படுபவர்க ளின் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க அனுமதி யளிக்கப்படுகிறது. நீதிமன்றங்களில் குற்றங்க ளை நிரூபிக்க இது அவசியம் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கைரேகை, கால் தடப்பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள் மற்றும் ரத்தம், தலைமுடி உள்ளிட்ட உயிரியல் மாதிரிகள் கட்டாயமாக சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இதற்கு உடன்பட மறுப்பவர்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயம் என்று சட்டம் இயற்றப்பட்டதோடு அந்த தரவுகளை யாருக்கும் தர மாட்டோம் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக் கப்பட்டது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களு க்கு ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக இந்த தரவுகளை அளித்து வருவது அதிர்ச்சியளிப்ப தாக உள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல் அடையாள விதிமுறை சட்டம் ஜனநாயக மாண்புகளுக்கும், தனிநபர் உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளது. இந்தி யாவில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகை யில் பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு அடுத் தடுத்து கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியா கவே இந்த சட்டத்திருத்தமும் உள்ளது. காலத் திற்கேற்ப சட்டத்திருத்தங்கள் அவசியம்தான். ஆனால் அது ஜனநாயகத்தையும், குடிமக்களின் கண்ணியத்தையும் கீழிறக்கம் செய்வதாக அமைந்து விடக்கூடாது.