தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு கூடாது. அது பெருங்குற்றம் என்கி றது சட்டம். இந்திய அரசியலமைப்பின் 17 ஆவது பிரிவு தீண்டாமையை தடை செய்கிறது. பிரிவு 15 (2) இன் படி, எந்தவொரு குடிமகனும் பொது இடங்களுக்குச் செல்லலாம். அவர்களின் உரி மைகளுக்கு கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனை களை விதிக்கக் கூடாது என்கிறது. ஆனாலும் பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதி கரித்து வருகின்றன. ஏன் இந்த நிலை?
கடந்த 9 ஆண்டுகளில் பட்டியலினத்தவர்க ளுக்கு எதிரான தாக்குதல் 43 விழுக்காடும், பட்டி யல் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் 48 விழுக்காடும் அதிகரித்திருக்கிறது. இதில் பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவ ரங்களை ஆராய்ந்தால் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்படும் பெரும் பகுதியினர் கல்வி, தண்ணீர், உணவு, கண்ணியமான வேலை, கலாச்சாரம், சமயப் பங்கேற்பு, நில உரிமை, கருத்துச்சுதந்திரம். நீதிக் கான முறையீடு உள்ளிட்ட உரிமைகளை நாடும் போது இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
2014 ஆம் ஆண்டு முதல் 2022 வரை பட்டிய லின மக்கள் மீதான தாக்குதல்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதே போல் பட்டியல் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலில் கடந்த 20 ஆண்டு களாக பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. 2022 புள்ளிவிவரத்தின்படி பட்டியலின மக்களுக்கு எதிராகப் பதிவு செய்யப் பட்டுள்ள மொத்த குற்றங்கள் 75 ஆயிரத்து 582. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 15 ஆயிரத்து 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்கள் தலித்களை அடக்கி ஒடுக்குவதில் முதலிடத்தில் இருப்பது தற்செயலானது அல்ல. பாஜகவின் கொள்கை சார்ந்ததாகவும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தை அமல்படுத்துவதற்குப் பதிலாக; ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டு, ஒடுக் கப்பட்டு அடிநிலையில் வைக்கப்பட்ட மக்கள் அப்படியே இருக்க வேண்டும் என்கிற மனுநீதி யின் வர்ணாசிரம முறையை முன்னிறுத்த முனைவதும் ஒரு காரணமாகும்.
இன்றைய உற்பத்தி உறவு சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும்- உடைமை வர்க்கத்தின் பிரதிநிதியாக பாஜக இருக்கிறது. உடமை வர்க் கத்தின் சுரண்டலை நிலை நிறுத்த சாதியக் கட்ட மைப்பு முதன்மையாக இருக்கிறது. அதனால் தான் உடமை வர்க்கத்திற்குச் சேவகம் செய்யும் பாஜக சாதியை, வர்ணாசிரம முறையை வலுப்படுத்து கிறது. அதன் ஒருபகுதியாகவே தலித்துக்களின் மீதான தாக்குதலையும் ஊக்கப்படுத்துகிறது. தலித் மக்கள் தங்களின் உரிமைகளை நிலை நாட்ட, சாதிய ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்தோடு, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் மற்றும் பாஜக ஆட்சியாளர்களின் மதவெறி- கார்ப்பரேட் கூட்டை எதிர்த்த போராட்டத்தை யும் இணைத்து நடத்திட வேண்டும்.