பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எந்தச் சூழ்நிலை யிலும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மா னத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தி ருப்பது வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசு நயவஞ்சகமாகத் தமிழ கத்தின் டெல்டா பகுதியை பலவனமாக்கும் விதத்தில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஏல ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்கப்பட்ட பகுதி. அதையும் மீறி இந்த ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. முன்ன தாக தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு கலந்தாலோ சிக்கவில்லை. இது அதிகார மமதையில் மாநில அரசுகளின் உரிமையை நசுக்கும் அடாவடி யாகும்.
மோடி அரசு தனது காவி கார்ப்பரேட் கூட்டா ளிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள கனிம வளங்களை தாரைவார்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது 101 நிலக்கரி சுரங்கங்களுக் கான ஏல அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட் டங்களில் உள்ள பகுதிகளும் இடம்பெற்றிருக்கின் றன. இந்த பகுதிகள் கடந்த 2 ஆயிரம் ஆண்டு களாகத் தமிழகத்தின் உணவு தேவையைப் பூர்த்தி செய்து வரும் பகுதிகளாகும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை அழித்திட முடியும். இதைத் தான் ஒன்றிய பாஜக அரசு விரும்புகிறதா?
நிலக்கரிக்கு பதிலாக மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த முடியும். ஆனால் உணவிற்கு மாற்றாக எதை உண்ண முடியும் ? இந்த ஏல அறி விப்பின் உண்மையான நோக்கம் நிலக்கரி எடுப்பது மட்டுமல்ல. மீத்தேன், எண்ணெய், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றையும் எடுத்திட முடியும். அதற்கான சூட்சுமம் ஒப்பந்த அறிவிப்பின் 32 ஆவது பக்கத்தில் உள்ளடங்கியிருக்கிறது.
ஒன்றிய மோடி அரசுக்கு நாட்டு மக்களின் நலனை விட அதானி, அம்பானி உள்ளிட்ட தங்களது கூட்டுக் களவாணிகளின் நலன்தான் முக்கியம். அதை ஒவ்வொரு திட்ட அறிவிப்பிலும் பார்க்கமுடியும்.
கார்பன் உமிழ்வில் இந்தியா 3ஆவது இடத்தி லும், பருவநிலை அபாய குறியீட்டில் 7 ஆவது இடத்திலும் இருக்கிறது. அதனால்தான் கிளாஸ் கோ பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி “கார்பன் உமிழ்வைக் குறைக்க நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்போம்; 2030ம் ஆண்டிற் குள் இந்தியாவிற்குத் தேவைப்படும் எரிசக்தி தேவையில் 50 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும்” என்றார். ஆனால் அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். அம்பானி, அதானிகளுக்காகத் தொடர்ந்து நிலக்கரி சுரங்கங்களைத் திறந்து விடுகிறார்.
இது கார்பன் உமிழ்வை மேலும் அதிக ரிக்கவே வழிவகுக்கும். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இப்பூவுலகின் இருப்பிற்கே கேடு விளைவிக்கும். ஒன்றிய அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதே அறிவார்ந்த செயல் ஆகும்.