headlines

img

பெண் விடுதலையின் சக்தி மார்க்சியமே!

முதலாளித்துவ உலகத்தைப் போல பெண்ணு ரிமைகளுக்காக பம்மாத்து செய்கிற சமூகம் வேறெதுவும் இல்லை என்று, முதலாளித்துவத்தின் இரட்டை வேடத்தை தகர்த்தெறிந்தவர்கள் மாமேதைகள் மார்க்சும், ஏங்கெல்சும். அவர்கள் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில், பெண்க ளின் உழைப்பு சக்தி எனும் மிகப்பெரிய படை, மிகக் கொடூரமாக வரலாறு நெடுகிலும் சுரண் டப்பட்டு வந்திருப்பதையும்; அதிதீவிர உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு மிக மிகக் குறைந்த கூலி அளிக்கப்படுகிற அடிமைத் தொழிலாளர்க ளாகவே வைக்கப்பட்டு வந்திருப்பதையும் கடுமை யான வார்த்தைகளில் சாடுகிறார்கள். 

முதலாளித்துவம், பெண் என்பவரை வெறுமனே உற்பத்திக்கான கருவியாக - பொருள் உற்பத்தி மற்றும் மனித இன உற்பத்தி - மட்டுமே  பார்த்து வருகிறது; பெண்ணுக்கு ஒரு உற்பத்தி கருவி என்ற அந்தஸ்தைத் தவிர வேறு எந்த உண் மையான அந்தஸ்தையும் தர மறுக்கிறது முத லாளித்துவம் என்றும் அம்பலப்படுத்துகிறார்கள். 

150 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய அவர்க ளது வார்த்தைகள் எத்தனை நிதர்சனமானவை! 

நிலபிரபுத்துவ - முதலாளித்துவ இந்திய சமூகக் கட்டமைப்பு, எத்தனை நாகரிகமானதாக தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், பெண்களைப் பொறுத்தவரை அது காட்டுமிராண்டித்தனமா கத்தான் நடந்து கொள்கிறது. ஏனென்றால் நில பிரபுத்துவம் - முதலாளித்துவத்தின் இயல்பே அதுதான். 

குடும்பம் என்ற சமூகத்தின் அடிப்படை அலகு, நிலபிரபுத்துவ முதலாளித்துவ சமூகத்தில் பெண்ணின் சிறைக்கூடமாகவே காட்சியளிக்கி றது. சமூக மாற்றம்தான் இந்த நிலையில் மாற்றத்தை கொண்டு வரும். இன்றைய சூழலில் இந்தியாவில் ஒரு பெண் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7மணி நேரம், 13 நிமிடங்கள் வீட்டு வேலைகளில் தனது உழைப்பைச் செலுத்துகிறார்; ஒரு ஆண் வெறும் 2 மணிநேரம், 53 நிமிடங்களே வீட்டு வேலைகளில் தனது உழைப்பைச் செலுத்துகிறார். இந்த ஒரு புள்ளி விபரமே, இந்திய குடும்பங்களின் ஆணாதிக்க கட்டமைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. 

மறுபுறம், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு பெண்ணின் உழைப்பு சக்தியை, கிட்டத் தட்ட கூலியில்லாத உழைப்பைப் போன்றே உறிஞ்ச முற்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கூலி யில்லாத உழைப்பாக - அதாவது முறையான தொழிலாளர் சந்தைக்குள் ஈர்க்கப்படாமல் சுமார் 83 சதவீதம் பெண்களின் உழைப்பு, குடும்பங்க ளுக்கான வீட்டு வேலை உழைப்பாக - மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. 2019- 2020 ஆய்வின்படி 22 சதவீதம் இந்திய பெண்கள் மட்டுமே ஏதோ வொரு வேலையில் இருக்கிறார்கள்; அதுவும் மிக மிகக் குறைவான கூலிக்கு. இந்த நிலையில் கோவிட் பாதிப்புக்கு பிறகு இது வெறும் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. 

சமூக, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இத்தகைய கொடிய சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் எதிர்த்து சமர்புரியும் ஆற்றல் மார்க்சியத்திற்கே உண்டு. அந்தச் சமர் நிச்சயம் வெல்லும்.