மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி வாழ்க்கை யிலும் வெற்றிபெறும் வகையில், திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதலை உள்ளடக்கிய “நான் முதல்வன்’’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டா லின் துவக்கி வைத்துள்ளார். இது காலத்தின் தேவைக்கேற்ப துவங்கப்பட்டிருக்கும் சரியான திட்டம் ஆகும். இது அனைத்து பகுதியினராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
குறிப்பாக இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக அமையும். முதல் தலைமுறை பட்டதாரி மாண வர்கள் அடுத்த இலக்கை எளிதாக எட்டி பிடிக்க வழிவகுக்கும். நான் முதல்வன் திட்டத்தை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் இணைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும்.
புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம், மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அயல்நாட்டு மொழிகள் கற்பிப்பது, அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இன்டர்ஸ்ட்ரி 4.0 தரத்திற்கு உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கூறுகள் காலத்திற்கேற்ற சரியான நடவடிக்கை யாகும்.
அதே நேரம் தமிழக மாணவர்களின் கல்விக்கு அடித்தளமாக இருக்கும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடும் மிகவும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக அரசு அரசுப் பள்ளிகள் மீது உரிய கவனம் செலுத்த வில்லை. அதனால் இன்றும் ஏராளமான அரசுப் பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதி, ஆய்வுக் கூட வசதி, கழிப்பிட வசதிகூட இன்றி பரிதாபமான நிலையில் இருக்கின்றன. அந்த நிலையை மாற்றிய மைத்திட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ள னர். சுமார் 6 லட்சம் பணியிடங்கள் நிரப்பிடாமல் இருக்கின்றன. அதில் அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் அடங்கும். மாணவர்க ளுக்கான உரிய கல்வியை உத்தரவாதப்படுத்திட அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது முதன்மையானது.
அப்போதுதான், “நான் முதல்வன்” திட்டத்தின் ஆக்கப்பூர்வமான நோக்கம் அனைத்து பகுதி மாண வர்களையும் முதன்மையாக சென்றடையும். அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஒப்பந்த முறையைத் தவிர்த்து நிரந்தர அடிப்படையில் செய்திட வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 318 அரசு பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளிகள், மற்றும் 1374 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் உள்ளன. இதே போன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழும் அரசு மாணவர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளின் தரத்தை ஆய்விற்கு உட்படுத்தி மேம்படுத்திட வேண்டும். அரசுப்பள்ளிகள், விடுதி களின் கட்டமைப்பை பூர்த்தி செய்து மாணவர்கள் முழுமையாகக் கல்வியில் கவனம் செலுத்திடும் வகையிலான சூழலை அரசு உருவாக்கிட வேண்டும். அப்போது நான் முதல்வன் திட்டம் மட்டு மல்ல, கல்வியிலும் தமிழகம் முதன்மையிடத்தைப் பிடிக்கும்.