நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது. வளர்ச்சி மற்றும் வசதிகளை பார்க்கும் நாம்; அது எதிர்காலத் தில் உருவாக்கும் விளைவுகளை பற்றி கவலைப்படு வதில்லை.
புவிவெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இனி ஆண்டு தோறும் பேரிடர்கள் நிகழும் என எச்சரித்திருக்கிறது பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழுவின் மதிப்பீட்டு அறிக்கை. இந்த புவிப்பரப்பு எவ்வளவு நாள் நிலைத்திருக்கும் என மனித சமூகம் ஒருபுறம் கவலையோடு பார்க்கிறது. ஆனால் மறுபுறம் சூழ லியலை பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி, லாப வெறியில் முதலாளித்துவ உற்பத்தி முறை நான்கு கால் பாய்ச்சலில் செல்கிறது. உலக அளவில் 71 விழுக்காடு பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு நூறு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
காடுகள் மற்றும் நீர்நிலைகள் அழிப்பு, வரன் முறையற்ற கனிமவளச் சுரண்டல், கரியமில வாயு உமிழ்வை கக்கும் நாசகர தொழிற்சாலைகள் என விரிவடைகிறது. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி பாதுகாப்பான சூழலியலை உருவாக்க வேண்டிய அரசுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் அதே அரசுகள் பருவ நிலை மாநாட்டில் போலிக்கண்ணீர் வடிக்கின்றன. இதில் இந்தி யாவும் விதிவிலக்கல்ல. ஒட்டு மொத்தத்தில் இந்த அலட்சியம் எதிர்கால மனித சமூகத்திற்கும் நல்லதல்ல.
கிளாஸ்கோவில் நடைபெற்ற 26 ஆவது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் மோடி 2070 க்குள் கரிய மில உமிழ்வை பூஜ்ஜியமாக குறைப்போம். 2030க்குள் புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தி திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம். அதே போல் ஒரு பில்லியன் டன் அளவிற்கு கரியமில வாயு உமிழ்வை குறைப்போம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் நடைமுறையில் அதற்கு நேர் எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறார். இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 388 ஜிகா வாட். இதில் 69 விழுக்காடு படிம எரி பொருட்களால் பூர்த்தி செய்யப்படுகிறது. அதில் நிலக்கரி 44 விழுக்காடு. எண்ணெய் 25 விழுக்காடு. இதன் காரியமில வாயு உமிழ்வு விதிமுறைகளை பின் பற்றுவதற்கான காலக்கெடுவை இந்தியா தற்போது 2025 வரை நீடித்திருக்கிறது. அப்படியென்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாசுபடுத்தும் என்பதை அரசே ஏற்கிறது. மத்திய மின்சார ஆணையமோ காலக்கெடுவை 2035ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என்கிறது. இது எந்த வகையில் வாயு உமிழ்வை குறைக்கும் நடவடிக்கையாகும்?
ஏற்கனவே தொழிற்சாலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான கால அளவு காலாவதியானா லும், 50 சதவிகிதம் திட்டம் செயல்படுத்தப்பட்டி ருந்தால் மீண்டும் ஆய்வு தேவையில்லை என்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பை அகற்றியிருப்பதுடன், பாமாயில் சாகுபடிக்கும் அனுமதித்திருக்கிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலை மேலும் சீர் குலைக்கவே செய்யும். மோடியின் வாய் சவடாலை நம்பாமல் விழித்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்வோம்.