பாரீஸ் ஒலிம்பிக்கில் வென்றால் தங்கம், தோற்றால் வெள்ளி என்ற நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் பெண்க ளுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்த 50 கிலோ பிரிவில் களம் இறங்கினார். சர்வதேசப் போட்டி களில் தோல்வியைச் சந்திக்காமல் வலம் வரும், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பா னின் யுய் சுசாயியை வீழ்த்தி சாதனை படைத்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் வென்று இறுதிச் சுற்றுக்கு வினேஷ் தகுதி பெற்றார். இந்திய தேசமே வினேஷ் போகத்தைக் கொண்டாடியது. ஆனால் திடீரென வினேஷின் தகுதி நீக்க அறி விப்பு வெளியானது. இது இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மல்யுத்த பிரிவில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் எந்தப் பிரிவில் பங்கேற்கிறார்களோ, அந்த பிரிவிற்கேற்ப உடல் எடையைக் குறைத்து, போட்டி நடக்கும் இரண்டு நாட்களுக்கு அதைப் பராமரிக்க வேண்டும். வினேஷ் உடல் எடையைக் குறைக்க உண்ணாமல், உறங்காமல் விடிய விடிய உடற்பயிற்சி செய்து, ரத்தத்தை வெளியேற்றி, முடியைக் குறைத்தும் இருந்தார். இறுதிப் போட்டி யில் அமெரிக்க வீராங்கனையுடன் மோதவிருந்த நிலையில் 50 கிலோவிற்கு சில கிராம் அளவிற்கு வினேஷ் எடை கூடியிருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே வினேஷ், தன்னை பாரீஸ் ஒலிம்பிக் கில் பங்கேற்க விடாமல் முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அது இறுதி நேரத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது.
“வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று தற்போது பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
விளையாட்டு வீரர்களுக்கு நேரும் அநீதிக்கு எதிராகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக் கிய பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது நடவடிக்கை கோரிய போராட்டத்தின் போது இதே பிரதமர் மோடி எங்கே சென்றார்? காவல்துறையை கட்டவிழ்த்துவிட்டு அடக்குமுறையை ஏவியது யார்? “எங்களைக் கொன்றுவிட வேண்டுமென் றால் கொன்றுவிடுங்கள். நாங்கள் குற்றவாளிகள் அல்ல. இந்த நாட்டுக்காகப் பதக்கங்களை வென்று கொடுத்தது இதற்காகவா?” என்று கண்ணீர் சிந்தியவர்தான் இந்த வினேஷ் போகத். அப்போது கள்ள மவுனம் காத்த பிரதமரை, இப்போது வாய் திறக்க வைத்திருக்கிறார் வினேஷ். இங்கேயும் வினேஷ் போகத் தான் வென்றிருக்கிறார்.
தேசத்திற்காகப் போராட்டக் களத்திலும், மல் யுத்தக் களத்திலும் போராளியாக முன்னிற்கும் உங்களோடு எப்போதும் இந்திய தேசம் உடன் நிற்கிறது.