சமீபத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய அரசின் ஆதரவு, பணபலம், ஆள்பலம் ஆகியவற்றால் சஞ்ஜய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆதரவாளர் களில் இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் வெற்றிபெற்றனர். 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏழு வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இருப்பி னும் மூத்த துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை அனிதா அணி கைப்பற்றியது.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்ஜய் சிங் வேறுயாருமல்ல மல்யுத்த வீராங்கனை களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் கையாள்தான். இவர்களது தேர்வு நாடு முழுவதும் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான இளம் பெண்களுக்கு அதிர்ச்சியளித்தது. தாங்கள் திட்டமிட்டு தோற் கடிக்கப்படுகிறோம் என்று மனவெதும்பிய மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும் விருதுகளையும் ஒன்றிய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. புதிய நிர்வாக குழு எடுத்த அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் விளையாட்டு வீரர்களின் போராட்டம் பாஜகவுக்கு தலைவலியாக மாறும் என்பதை ஒன்றிய அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவேதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதே தவிர குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்ற அக்கறை யினால் அல்ல. ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் பாலியல் குற்றச் சாட்டுக்கு ஆளான பிரிஜ்புஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் அளித்துள்ள புகார்கள் குறித்து தில்லி காவல்துறையில் உள்ள நேர்மை யான அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டும். அவர்மீது பாலியல் குற்றப்பிரிவு களின்கீழ் வழக்குப் பதிவுசெய்யவேண்டும்.
விளையாட்டு உலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்து கடந்த காலத்தில் வெளிப் படையாகப் பேசப்படவில்லை. அதனால் துணிச்சலாக பொதுவெளிக்கு கொண்டு வந்த முன்னணி மல்யுத்த வீராங்கனைகளுக்கு அரசு துணைநிற்கவேண்டும். ஆனால் பிரிஜ்புஷ னுக்கு எதிரான வழக்கில் இதுவரை மல்யுத்தம் மட்டுமல்ல, விளையாட்டு உலகமே பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்ற அச்சத்தை வலுப்படுத்தியுள்ளது.