headlines

img

பாஜக ஆட்சியில் எங்கும் எதிலும் கசிவுதான்

மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக் காக அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக் கும் வகையில் அதிக இருக்கைகளை உள்ளடக் கியதாக புதிய நாடாளுமன்ற கட்டடம் அவசியம் என்று கூறி கடந்த 2020 இல் பிரதமர் மோடி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கட்ட டம், சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் முக் கோண வடிவில் கட்டப்பட்டது. இதற்காக, முதலில் ரூ.971 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் செலவு ரூ.1,000 கோடியை எட்டியது. 

கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற பின்னர், கடந் தாண்டு மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி அவசர அவசரமாக திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரைக் கூட அழைக்கவில்லை. பழங்குடியினப் பெண்மணி என்பதால்தான் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதுகுறித்து கடுமையான விமர்சனங்களும் அன்று எழுந்தன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக் கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலு வாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது தலைநகரில் ஒருநாள் பெய்த மழைக்கே அக்கட்டடம் தாங்கவில்லை.

கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் காணொலிக் காட்சிகள் வைரலாக வந்தன. “வெளியே வினாத்தாள் கசிவு; உள்ளே தண்ணீர் கசிவு” எனவும்  “ரூ.1200 கோடி கட்ட டத்தைப் பாதுகாக்க 120 ரூபாய் விலையிலான பக்கெட்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நையாண்டி செய்து சமூக வலைதளத்தில் பதி விட்டனர். மிக நவீன தொழில்நுட்பத்தில் கட்டப் பட்ட கட்டடம் இப்படி ஒழுக மோடி அரசின் அலட்சியமே காரணம்.  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை சுவடே தெரியாமல் அழிக்கவேண்டும் என்ற இலக்கோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. அடுத்து ஆட்சி க்கு வருவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் அவசரப்படாமல் பணிகளை முடித்திருப்பார்கள். ஆனால் ஆட்சிக்கு வரவாய்ப் பில்லை என்று அவர்கள் உறுதியாக நம்பியதால் தான், திறக்கும் வாய்ப்பை அடுத்த ஆட்சியாளர்க ளுக்கு விட்டு விடக்கூடாது என்பதற்காக அவசர கதியில் திறந்தார்கள்.  இப்போது அந்த கட்ட டத்தின் ‘திறன்’ வெளியே தெரிந்துவிட்டது. 

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கட்டப் பட்டு ஓராண்டுதான் ஆகிறது. எனவே புதிய கட்ட டத்தின் தாங்கும் திறன் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். நாடாளுமன்றம் மட்டுமல்ல; பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ராமர் கோவிலின் கருவறை ஒழுகுகிறது. தில்லி - வார ணாசி வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையும் ஒழுகு கிறது.  புதிய நாடாளுமன்ற  கட்டடம் பசுமை கட்டட மாக கட்டப்பட்டது என்றும் சூரிய ஒளியை பெற  கட்டடத்தின், தாழ்வாரம் உள்ளிட்ட பல இடங்க ளில் கண்ணாடி குவிமாடங்கள் வைக்கப்பட்டுள் ளதாகவும் ஒட்டுப்பசை அகன்றதே கசிவுக்கு காரணம் என்றும் ஆட்சியாளர்கள் சால்ஜாப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது.