games

img

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் – காலிறுதியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து  

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.  

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சூயி இங் என்பவருடன் எதிர்கொண்டார். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 14-ல் தாய் ஸுவும் 5-ல் சிந்துவும் வெற்றி பெற்றிருந்தார்கள். மேலும் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் தாய் ஸுவிடம் சிந்து தோல்வியடைந்திருந்தார்.  

அதனை தொடர்ந்து இன்று விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பி.வி.சிந்து, காலிறுதி ஆட்டத்தில் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனை அடுத்து தாய் சூயி இங் அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.