உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி – ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின்(BWF) தடகள ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் உலக சாம்பியன்சிப் ஆன பி.வி.சிந்து 2021-2025 ஆண்டு வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பார்.
இதைதொடர்ந்து அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவை சேர்ந்த கிரேசியா போலி, கொரியாவை சேர்ந்த கிம் சோயியாங் மற்றும் சீனாவின் செங் சி வெய் ஆகியோரும் தடகள ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து புதிய ஆணையம் கூடிய விரைவில் இந்த 6 உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்யும்.