games

img

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் பிரணோய்

பேட்மிண்டன் உலகின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான ஜப்பான் ஓபனின் 41-வது சீசன்  ஒசாகா நகரில் நடைபெற்றுவருகிறது.  இந்த தொடரில் இந்திய வீரர் - வீராங்கனைகள் சொதப்பலான ஆட்ட த்தை வெளிப்படுத்தி வெளியேறியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சூப்பர் பார்மில் விளையாடி வரும் பிரணோய் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் கீனை 22-20, 20-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறினார். அதிகம் எதிர்பார்த்த ஸ்ரீகாந்த் 3-வது  சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கன்டா விடம் 10-21, 16-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளி யேறினார். ஜப்பான் பேட்மிண்டன் தொடரில் களமிறங்கிய அனைவரும் வெளியேறியுள்ள நிலையில், கடைசி இந்தியராக பிரணோய் மட்டுமே விளை யாடி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.